வியாழன், மே 26, 2005

கலைமகள் - மே 05

sify.com ::

* தாம்பிரவருணி பதில்கள்
தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதே அளவுத் தொகை (12%) தொழில் அதிபர்கள் பங்களிப்பாக ஊழியர்களின் சேமநலநிதிக் கணக்கில் செலுத்த வேண்டும்.

* சிரி(ற)ப்பு அண்ணா கி.வா.ஜ
அடுத்த கூட்டத்திற்கு யாரை அழைக்கலாம்?' என்று நாங்கள் கூடிப் பேசியபோது, "வாகீச கலாநிதி' கி.வா.ஜ.வை அழைக்கலாம் என்று முடிவெடுத்தோம்.

* சமையல் போட்டி திருவிழா
சமையல் கலை இன்று நவீனமாக அவதாரம் எடுத்துள்ளது. ஒரு சமையல் அறையை பெரிய ஹோட்டல்களில் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும்?

* ஊருக்கு உழைத்திடல் யோகம்!
அதிகாலை ஆறு மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காலடி வைத்தபோது என் மனதுக்குள்ளே ஒரு குறுகுறுப்பு. அதிலும் திருப்பதி ஸப்தகிரி விரைவு வண்டியில் ஏறி அமர்ந்தபிறகு, என் மனம் எங்கெல்லாமோ சிறகடித்துப் பறந்தது.

* நூல் அரங்கம்
தண்ணீர் தனியார் மயமாக்கப்படுவதால் ஏற்படும் விபரீதங் களை இந்நூலில் ஆசிரியர் கூறியுள்ளார். உலக நாடுகள் பலவற்றிற்கு பயணம் செய்து மிகுந்த அனுபவ அறிவு பெற்றவர் ஆசிரியர் பால்பாஸ்கர்.

* நிறம் மாறிய வானவில்
உஷாவுக்கு அன்றைக்கு வேலைக்குப் போகப் பிடிக்கவில்லை. லீவ் போட்டு விட்டாள். நல்ல மழை பெய்து குளுமையாக இருந்தது. சுடச்சுட பஞூஜி சாப்பிட்டுக் கொண்டே கிரிக்கெட் மாட்ச் பார்க்கும் திட்டத்தில் இருந்தாள்

* ஓவியன்
நகரத்தின் எல்லைக்கு வெளியே. நெடுஞ்சாலைப் பாலத்துக்குக் கீழ்புறம் பள்ளத்து மேட்டில் நாலைந்து குடிசைகள் அநாதைப் பிள்ளைகள் போல இருந்தன.

* நாடி சொல்லும் கதைகள்
அகஸ்தியரின் நாடியை நம்புகிறோம். ஆனால் இப்படியொரு தெய்வீக சந்திப்பைப் பற்றி நம்பும்படி இல்லை. ஜீரணிக்கவே கஷ்டமாகத்தான் இருக்கிறது'' என்று நேரிடையாகவே நிறைய பேர் சொன்னதும் உண்டு.

* மலேசியா பயணக்கட்டுரை
சாதாரணமாக வெளிச்சத்திற்காக நாம் மெழுகுவர்த்திகளை உபயோகிப் போம். ஆனால் வித்தியாசமாக ஒரு மெழுகுவர்த்தியைக் காண நேர்ந்தது. இதுபல மருத்துவ குணங்களைக் கொண்டது. இதை இயர்கேண்டில் என்கிறார்கள்.

* மதுரவல்லி
மாலைத் தென்றலின் சுகமான காற்றையும், பூக்களின் நறுமணங்களையும் இரசித்தபடி பாண்டிய அரண்மனையின் நந்த வனத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர், தென்னவனும், மதுரவல்லியும்.

* பொழுதும் போதும்
தமிழர், காலத்தைச் சிறுபொழுது, பெரும்பொழுது என்று இரண்டு பிரிவாகப் பிரித்தனர். அவற்றுள் சிறு பொழுது ஆறு; பெரும்பொழுது ஆறு. சிறுபொழுது ஐந் தென்பது ஒரு சாரார் கொள்கை. வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்னும் ஆறும் சிறுபொழுகளாம். இவற்றில் ஒவ்வொன்றும் பப்பத்து நாழிகைகளை உடையது. பெரும்பொழுதை இருதுவென்று கூறுவர் வட நூலார்

* அழகு மயில் ஆட...
சில முகங்கள் பார்த்தவுடனேயே "பச்' சென்று பதிந்து விடும். இன்னும் சில முகங்கள் வயசு வித்தியாசம் இல்லாமல் சினேகிக்கத் தோன்றும்.

* 220 கோடி குழந்தைகள்
உலகின் குழந்தைகளில் 18 வயதுக்குக் கீழுள்ள 220 கோடி குழந்தைகள்.

* பாலாஜிக்கு டான்ஸ் ஆடத் தெரியும்!
இந்திய கிரிக்கெட் பவுலர் பாலாஜி ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்.

* அருணா ஓர் ஆச்சர்யம்
பணம் மட்டும் இருந்தால் என்ன வெல்லாம் செய்யலாம். அபஸ்வரமாகப் பாடினால்கூட "சங்கீத பாரதி' விருது பெறலாம். சுமாராக ஆடினால் கூட "பரத மயூரி' பட்டம் வாங்கலாம். யார் யாரோ நெற்றி வியர்வை சிந்த உழைத்ததை எல்லாம், தானே சுயமாய் வடிவமைத்ததாகச் சொல்லி பெயர் வாங்கிக் கொண்டு போகலாம். பத்து பேரை சுற்றி வைத்துக் கொண்டு ஆஹா ஓஹோ என துதி பாடச் செய்யலாம்.

* ஆலோசனை மையம்
எனக்கு வயது 26. எனக்கு முகத்தில் பருக்கள் கொத்து கொத்தாக இருக்கிறது. எனது தங்கை, வயது 18 அவளுக்கும் இருக்கு. ஆனால் ஒன்றிரண்டு மட்டும். ஏன் எனக்கு இப்படி.... இதற்கு ஒரு வழி சொல்லுங்களேன்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு