வியாழன், ஜூன் 16, 2005

என்னைப் பெரிய ஆளாக்காதீங்க

நடிகர் விஜய் :: நிருபர் ஒருவர், "நீங்கள், முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திச்சு ஒரு 'கவர்' கொடுத்தீங்க! அது என்ன விவகாரம்?" என்று கேட்க.. "அது எங்க சொந்த விஷயம்" என்றார் ரொம்ப யோசித்து.

"அதற்காக பத்திரிகையாளர்களிடம் கூட விளக்கம் சொல்லக்கூடாதா?" என்று திரும்பக் கேட்டார் நிருபர். சற்று நேரம் எந்தப் பதிலும் சொல்லாமல் இருந்த விஜய் இறுதியில் மீண்டும் "அதுதான் எங்க சொந்த விஷயம்னு சொல்றோமே!" என்றார் சற்று டென்ஷனுடன். இதையடுத்து எழுப்பப்பட்ட பல கேள்விகளும் விஜய்க்கு டென்ஷன் ஏற்படுத்தும் விதமாகவே அமைந்துவிட்டன.

  • "விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார். அதற்கு உங்களின் ஆதரவு இருக்கா..?"
  • "சுனாமி பாதித்த பகுதியில் அந்நிய மொழி நடிகர் ஒருவர்தானே வந்து உதவிகள் செய்தார்? நீங்கள் என்ன செய்தீர்கள்?" என்றெல்லாம் பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

    'பிரஸ் மீட்' முடிந்ததும் இடக்கு மடக்கு கேள்வி கேட்ட ஒரு நிருபரை நெருங்கி, 'என்ன கேள்வி கேட்கறீங்க. யோசிச்சுக் கேளுங்க. மாட்டிவிடப் பார்க்கறீங்களா?' என்று ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும் நிருபரின் நெஞ்சில் பதித்து எச்சரித்துவிட்டே நகர்ந்தார்.

  • 4 கருத்துகள்:

    இது ஊகம்தான்; நிச்சயமாகத் தெரியவில்லை.

    அது என்னவென்றால்,
    'நடிகைகள் 2 பேருக்கு அண்மையில் ஜெ. 10 லட்சமோ என்னவோ பண உதவி செய்தார்' என்று செய்தி வந்தது. ஒருவேளை இங்கே வாங்கி அங்கே கொடுத்தாரோ? என்னவோ.

    ------------
    விளம்பரம்
    ------------
    சஸ்பென்ஸ் படித்தீர்கள், சரி.

    ஒரு crime story படிக்கனும்னா இங்கே... கொல், கவனி, செல்.

    //விஜய் கல்யாண மண்டபம் வாங்கியதா பேச்சு. அது சம்பந்தமா இருக்கும்//

    அப்படியா.... இந்த திருமண மண்டபங்கள் நடிகர்களை படுத்தும் பாடு ... ஒரு காந்த் என்னவென்றால் கலைஞரிடம் ஓடுகின்றார், இவர் அம்மாவிடம் ஓடுகின்றார், இன்னொருவர் வள்ளாலாகின்றார்...
    இதையும் படித்துப்பாருங்களேன்...
    இரண்டு காந்த்களும் இரண்டு மண்டபங்களும்

    Rajini Still With 250 theaters record -Super

    ஞானபீடம் & மூர்த்தி: பிண்ணணித் தகவல்களுக்கு என் நன்றி.

    >>How dare can he do like that in public?

    இது என்னங்க நியாயம் ;-) தனியா கவனிச்சா ஒகேவா :P

    >>What is he thinking of himself?

    அவருக்கு பதில் சொல்ல விருப்பமில்லையென்றால், 'நோ காமண்ட்ஸ்' என்று தமிழிலோ, 'அடுத்த கேள்வி எதுனாச்சும் இருக்கா' என்றோ சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். அதை விட்டு விட்டு மிரட்டியது டூ மச்.

    குழலி, அது நீங்கள் எழுதியவுடனேயே படித்தேன். நன்றி.

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு