புதன், நவம்பர் 02, 2005

தமிழோசையில் திருமா

திருமாவளவன் செவ்வி

கேள்விகள் சில:

  • ஒரு காலத்திலே, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகத்திலே மிகப் பெரிய விழிப்புணர்வு, ஒரு வேகம், உணர்வுபூர்வமான ஆதரவு இருந்தது. ஆனால், கடந்த கால சம்பவங்களுக்குப் பிறகு தமிழகத்திலே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு என்ன மாதிரியான அணுகுமுறை இருக்கிறது? மக்களிடையே என்ன மாதிரியான உணர்வுகள் இருக்கின்றன? அரசியல் கட்சிகளிடையே என்ன மாதிரியான நிலைப்பாடு இருக்கிறது?

  • எந்த காரணத்தினால் விடுதலைப் புலிகளுக்கு, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு, வெளிப்படையாக ஆதரவு தரவேண்டிய நிலை ஏன்?

  • பொடா சட்டம் மட்டுமே தமிழக மக்களை (விடுதலைப் புலிகளை விட்டு) விலக்கி வைப்பதாக நினைக்கிறீர்களா? அது தவிர கடந்த பதினைந்து ஆண்டுகளாக நிகழ்ந்த சில நிகழ்வுகள் கூட பொதுமக்களை விலகிச் செல்ல வைக்க கூடும் என்று கருதலாம் அல்லவா?

  • வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் உங்களின் அரசியல் நிலைப்பாடு என்ன?

  • கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளாக தமிழ் தேசியம் என்பது திராவிடக் கட்சிகளின் போராட்டமாக இருக்கிறது. தமிழ் தேசியத்துக்குள் தலித் மக்களைக் கொண்டு வந்தார்களா என்ற கேள்வி இருக்கிறது. தமிழ் தேசியம் என்பது தலித் மக்களுக்கு உண்மையான முன்னேற்றத்தைக் கொண்டு வருகிறதா? விடுதலை சிறுத்தைகள் தமிழ் தேசியம் பேசுவதன் அர்த்தம் என்ன?

  • 2001 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் பா.ஜ.க. என்னும் ஹிந்து வலதுசாரி கட்சியுடன் அரசியல்ரீதியாக தொடர்பு வைத்துக் கொள்வது உங்களுக்குப் பிரச்சினையாகத் தோன்றவில்லை. சித்தாந்தரீதியில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கக் கூடிய ஆர்.எஸ்.எஸின் அரசியல் அங்கமாகக் கருதப்படும் பாரதீய ஜனதா கட்சியுடன், உங்களைப் போன்ற கட்சிகள் ஒரே அணியில் எப்படி இருக்க முடியும்?

    திருமாவளவனின் பதில்கள்



    | |

  • 0 கருத்துகள்:

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு