திங்கள், ஜனவரி 22, 2007

Celebrities Pokkiri Pongal

நான் ஒரு முறை முடிவெடுத்துட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்!


இது 'போக்கிரி' வசனம்.

  1. சோனியா காந்தி: நான் ஒரு முறை முடிவெடுத்துட்டா மன்மோகன் பேச்சை நானே கேக்க மாட்டேன்!

  2. ஷாரூக்கான்: நான் ஒரு முறை நிகழ்ச்சி நடத்திட்டா, என் KBC-ஐ நானே பார்க்க மாட்டேன்.

  3. ஷில்பா ஷெட்டி: நான் ஒரு முறை திட்டு வாங்கிட்டா, என் காசை நானே எண்ண மாட்டேன்.

  4. ஐஸ்வர்யா ராய்: நான் ஒரு முறை நடிக்க ஆரம்பிச்சுட்டா, என் படத்தை நானே பார்ப்பேன்.

  5. கங்குலி: நான் ஒரு முறை ஆடி அடிச்சுட்டா, என் மாட்ச் ஃபிக்சிங்க நானே கண்டுக்க மாட்டேன்.

  6. அரசியல்வாதி: நான் ஒரு முறை மசோதாவை நிறைவேற்றிட்டா, என் சட்டத்தை நானே கடைபிடிக்க மாட்டேன்.

  7. சானியா மிர்சா: நான் ஒரு பந்தை போட்டுட்டா, என் ரிடர்னை நானே திரும்ப எடுக்க மாட்டேன்.

  8. தீவிரவாதி: நான் ஒரு முறை குண்டு போட தொடங்கிட்டா, என் வாழ்வை நானே மதிக்க மாட்டேன்.

  9. வலைப்பதிவர்: நான் ஒரு முறை திட்ட ஆரம்பிச்சுட்டா, என் பதிவை நானே நிறுத்த மாட்டேன்.



| |

8 கருத்துகள்:

eeshwara.... koduma thaangaama inga vantha ingayumaa??????????
vidu joot

நான் ஒருமுறை முடியெடுத்துட்டா..
திரும்ப முடி வளர்ந்துடும்

சின்னத்தம்பி

---koduma thaangaama inga vantha ingayumaa---

எங்கேயிருந்து தப்பிச்சு வந்து இங்கே மாட்டிகிட்டீங்க : D

சிறில் அலெக்ஸ்

---நான் ஒருமுறை முடியெடுத்துட்டா.. திரும்ப முடி வளர்ந்துடும் ---

நான் ஒரு முறை கடிச்சுட்டா, என் ஜோக்கை நானே கேக்க மாட்டேன்!

வலைப்பதிவர்: நான் ஒரு முறை மட்டுறுத்தணும்னு முடிவெடுத்துட்டா அப்றம் என் பின்னூட்டத்தைக்கூட அப்படியே அனுமதிக்க மாட்டேன்!

திருடன்: நான் பூட்டை ஒடைக்கணும்னு முடிவெடுத்துட்டா அப்றம் என் வீட்டையே என்னால் பாதுகாக்க முடியாது.

nalla irundhadhu..pokiri padathai parkala villai enraalum rasikka mudinadhadhu

சுந்தர்

இரண்டுமே வெகு அருமை.

ஹைகூ கவிதையாக, தலைப்புக்கேற்ற சொற்சிக்கனத்துடன், பொருத்தமாக இருக்கிறது.

@கார்த்திக் நன்றி.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு