செவ்வாய், மார்ச் 06, 2007

Northern Ireland Elections

நாளை வடக்கு அயர்லாந்தில் தேர்தல்

ஏன் முக்கியம்?

இங்கிலாந்தோடு இணைந்து இருக்க விரும்பும் கத்தோலிக்க குடியரசுக்கும் எதிர் கட்சியான அயர்லாந்தோடு இணைய விரும்புபவர்களுக்கும் இடையே போட்டி.

விடுதலைக்காகப் போராடியதில் கடந்த முப்பதாண்டுகளில் மட்டும் 3,600 பேர் இறந்திருக்கிறார்கள்.

2003-இல் வென்ற சபை ஒரு முறை கூட, நாள் முழுக்க அமர்வில் இருக்கவில்லை என்பது நம்பிக்கை ஊட்டாத பின்னணி.


யார் ஜெயிப்பார்கள்?

சென்ற தேர்தலுக்கும், இந்த முறைக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்கப் போவதில்லை.

பிரிட்டனை ஆதரிக்கும் குடியரசு சங்க கட்சி (Democratic Unionist), பெரும்பானமை பெறும்.

இங்கிலாந்தோடு சேர்வதை கடுமையாக எதிர்த்துப் போராடிய ஐ.ஆர்.ஏ. ஆதரவுக் கட்சிக்கு இரண்டாம் இடம்.

நடுநிலைவாதிகள் இருவரையுமே விரும்புவதில்லை. எந்தவித ஒப்புதலுக்கும் ஆதரவளிக்காதவர்களும் இவர்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை.


கடைசியாக என்ன நடக்கும்?

அரசில் பங்குபெறுவதற்கான பேச்சுவார்த்தையை முக்கிய தலைவர்கள் தொடங்கலாம். இந்த மாதம் 26-க்குள் முடிவான ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், சபையை கலைத்துவிடுவோம் என்று இங்கிலாந்தும் அயர்லாந்தும் மிரட்டியிருக்கிறது. கெடு அனேகமாக தள்ளிப்போடப் படும்.

இரு அன்னிய நாடுகளும் கூட்டணியாக தங்களை ஆள்வதை, வடக்கு அயர்லாந்தின் இரு கட்சிகளுமே விரும்பவில்லை.

'பிரச்சினையை தீர்த்து வைத்த பிதாமகன்' என்னும் அடைமொழியோடு பதவி விலக, பிரதம மந்திரி டோனி ப்ளேருக்கு ஆசை. கோடை காலத்தில் தேர்தலை சந்திக்கப் போகும் அயர்லாந்து அதிபருக்கும், அதே அவா.


கூட்டணி அரசு எப்படி இருக்கும்?

அடிதடி, குழப்பம் கொண்ட மத்திய அரசு போலவே இருக்கும்.

வடக்கு அயர்லாந்தின் இரு துருவங்களும், ஆட்சியில் பங்கு வகிப்பதால், முன்னாடி இருந்த நடுநிலைவாதிகளை விட சிறப்பாக இருக்கும்.

வெற்று பிணக்கைத் தொடர்வதை விட, பொருளாதாரமும் உள்ளூர் சேவைகளும் மிளிர்வதை மக்கள் விரும்புவதால், கட்சிகள் செயலிலும் கூட்டணி காணும்.

நன்றி:
1. Reuters AlertNet - FACTBOX- What will Northern Ireland's election mean?

2. Q&A: Northern Ireland Assembly | Devolution: Who stands where on key issues

1 கருத்துகள்:

வட அயர்லாந்து அதிகாரப் பகிர்வு குறித்து உடன்பாடு

ஐக்கிய இராஜ்ஜியத்தின் ஒரு மாகாணமான வட அயர்லாந்தில், கத்தோலிக்க மற்றும் ப்ரோட்டஸ்டன்ட் கிறித்தவ பிரிவிகளுக்கிடையே அதிகாரப் பகிர்வு கொண்ட நிர்வாக அலகினை வரும் மே மாதம் எட்டாம் தேதியன்று ஏற்படுத்த இந்த மாகாணத்தில் எதிரெதிர் அரசியல்வாதிகளான டியுபி அமைப்பின் தலைவர் இயான் பெய்ஸ்லியும், ஷின் ஃபென் அமைப்பின் தலைவர் ஜெர்ரி ஆடம்சும் ஒத்துக் கொண்டுள்ளனர்.

ப்ரோட்டஸ்டண்ட் மற்றும் கத்தோலிக்க அமைப்புக்களின் இந்த இரு தலைவர்களுக்கிடையே, பெல்ஃபாஸ்ட் நகரில் நடைபெற்ற முதலாவது நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இன்றைய இந்த அறிவிப்பு வந்துள்ளது.

கடந்த காலத்தில் நடைபெற்ற கொடூரமான சம்பவங்களுக்குப் பின்னர், எதிர்காலத்தில் இருக்கக் கூடிய பெருமளவிலான ஆக்கபூர்வமான வாய்ப்புக்கள் குறித்து பெய்ஸ்லி அவர்கள் பேசினார்.

ஐரிஷ் அரசியலில் இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என ஆடம்ஸ் தெரிவித்தார்.

பெய்ஸ்லியின் டியுபி கட்சியினர் பிரிட்டனின் ஒரு பகுதியாகவே வட அயர்லாந்து இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். வட அயர்லாந்தில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவிற்கு வர வேண்டும் என ஆடம்ஸ் அவர்களின் ஷின்ஃபென் விரும்புகிறது.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு