திங்கள், ஜனவரி 05, 2004

புதுகோட்டையிலிருந்து சரவணன்

பாடியவர்கள்: குணால், ஹேமா சர்தேசாய், நிதிஷ் கோபால், யூகி

இசை: யுவன் ஷங்கர் ராஜா

M:
ஆ...
நாட்டு சரக்கு நச்சுனுதான் இருக்கு
கிட்ட வந்து முட்ட வந்தா கின்னுனு தான் இருக்கு

M 1:
புதியதா பாடுடா மச்சி

M:
கோரஸ் 1:
நாட்டு சரக்கு நச்சுனுதான் இருக்கு
கிட்ட வந்து முட்ட வந்தா கின்னுனு தான் இருக்கு
தங்கக் குடமே தஞ்சாவூரு கடமே
மந்திரிச்சு விட்டுப் புட்ட மலையாளப் படமே!

கோரஸ் 2:
என்ன சைஸு இது மாமேய்
என்ன வயசு இது,
அய்யே ஐஸு இது ஆமா
ரொம்ப நைசு இது
நெஞ்சை நசுக்கி
கண்ணை அசக்கி
என்னை மசாஜுதான் செஞ்சி புட்டாளே

கோரஸ் 1

பள்ளிக்கூடத்தில நாங்க பழுத்த பிஞ்சுங்கதான்
ஓன்னா பாத்ததுலே லேசா கொதிக்கும் நெஞ்சுலதான்

F:
ஆறடி சந்தையிலே தினமும் அல்வா வித்தவதான்
ஆட்டு மந்தையில இருந்து ஆனைப் புடிச்சவதான்

ஹோய்....

M:
ஓட்டை பாலத்தில் ஊதும் பீடி தான்
ரயிலு புகையாக தான் விட்டோமடி

F:
காட்டு பல்லத்தில் கள்ளன் புடிக்கவே
கொத்தும் மைனாவும் சுட்டோமடா

M:
மஞ்ச கிழங்கே, மச்சினி உன் உடம்பா
நெஞ்சுக்குள்ளே வீடு கட்டி நிக்கிறியே குறும்பா
பச்ச நரம்பா பத்தினி நீ கரும்பா
உன்னுடைய முதுகில ஒட்டிக்கிறேன் தழும்பா

G:
ரரரறே....ஆ...
லுளுலு...
போடு....
அமுக்கிப் போடு....

M:
வாடி வஞ்சியம்மா நெஞ்சை வலைச்சிப் பூட்டிகிட்டே
இடுப்பில் மடிப்பு இல்லே எங்க இஸ்திரி போட்டுகிட்டே

F:
அரும்பு மீசையில நீதான் ஆளத் தூண்டி விட்ட
அருணாக் கைத்துலதான் என்ன கட்டிப் போட்டுபுட்ட

M:
சுருக்கு பைய்யில சுருக்கு பைய்யில
சுருங்கிப் போவோமே உன் கைய்யில

F:
அடுத்தத் தையிலே வீட்டில் சொல்லித்தான்
பொண்ண பாத்துக்கோத் தங்கத்தில

M:
கோரஸ் 1
கோரஸ் 2
கோரஸ் 1

M 2:
ஹேய் வாந்தி எடுக்காதே மடையா...

ஞாயிறு, ஜனவரி 04, 2004

அர்மீனியாவுக்கும் அணுகுண்டு: பாக். புது திட்டம்

பாராவின் பதிவை பிரதிபலிக்கிறது
டைம்ஸ்.

* பாகிஸ்தானுக்கு என்றுமே தனி வழி. வட கொரியா, ஈரான், லிபியா
என்று பல நாடுகளுக்கு அணு அயுத தொழில் நுட்பத்தை தாரை
வார்த்துள்ளது.

* ரஷியாவிற்கு எதிராக ஒரு நட்பு நாட்டின் அவசியம் கருதி கண்டுக்காமல்
விட்டு விட்டிருந்தார்கள்.

* நெதர்லாண்ட்ஸில் இருந்து 1976-இல் பாகிஸ்தான் திரும்பிய முனைவர் கான்
பல முக்கியமான வடிவமைப்புகளைத் திருடி எடுத்துக் கொணர்ந்துதான் முக்கிய
திருப்பம்.

* 'மேற்கத்திய நாடுகளின் எதிரி பாகிஸ்தான் மட்டுமல்ல; ஒட்டுமொத்த
இஸ்லாமுக்கும் எதிரிகள்' என்கிறார் கான்.

* யூரேனியம் செண்ட்ரி·ப்யூஜ்களை தயாரிக்கும் வித்தைகளை
'யான் பெற்ற இன்பம் ...' என 1998-இல் கான் அறிவியில் சஞ்சிகைகளில்
வெளியிட்டு விடுகிறார்.

* 1987-இல் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள், இந்தியாவை
மிரட்டவும் எச்சரிக்கவும் பயன்படுகிறது.

* 'அழுகிற பிள்ளை பால் குடிக்கும்' என்பது போல் அமெரிக்க உளவுத் துறை
1986-இல் பாகிஸ்தானிடம் அணுகுண்டுக்கான யூரேனியம தயார் என்ற அறிக்கை
சமர்ப்பிக்கப் பட்டவுடன் நான்கு பில்லியன் (அம்மாடியோவ்...) டாலர் உதவித்
தொகை வழங்கப் படுகிறது.

* சைனாதான் எல்லாவற்றிற்கும் கால்கோள் போட்டது. 1960-இலேயே
பக்கத்து வீட்டுக்காரருக்கு அணுகுண்டுகள் தயரிக்க பாலபாடம் ஆரம்பித்தது.

* பதிலுக்கு உதவி செய்ய முனைவர் கானும் தான் எடுத்து வந்த ஐரோப்பிய
வடிவமைப்புகளை சீனாவுடன் பகிர்ந்து கொள்கிறார்.

* மாப்பிள்ளை கொடுத்து மருமகள் எடுப்பது போல் வட கொரியாவிடம்
ஏவுகணை வித்தையை வாங்கி செண்ட்ரி·ப்யூஜ் நுட்பங்களைத் தர
ஒப்புக் கொண்டார்கள்.

* முஷார·ப்பை இதுவரையில் தர்மசங்கடத்தில் ஆழ்த்தாமல் இருக்க இவற்றை
பொதுஜனத்திற்கு வெளியிடுவதை தவிர்த்து வந்தவர்கள், இப்பொழுது டைம்ஸ்,
போஸ்ட் இன்ன பிற நாளிதழ்கள் மூலம் அமெரிக்கர்களை வெளிச்சத்துக்கு
அழைக்கிறார்கள்.

* ஜெர்மானி, இத்தாலி, தாய்வான், ஜப்பான் என்று பல தேசங்கள், கைகள் மூலம்
பொருட்கள் வட கொரியாவிற்கும் மற்ற அமெரிக்க எதிரிகள் கையிலும்
சிக்காமல் தடுக்கிறார்கள். சீனா போன்ற மற்ற நாடுகள் உதவுகிறதா, தடுக்கிறதா
என்று சொல்லவில்லை.

* அமெரிக்காவிற்கு எதிரானவர்கள் அனைவருமே நண்பர்களாக விளங்கி,
ஒற்றுமையோடு, ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள்.

பாடம்: அமெரிக்காவை ஏமாற்றுவது எளிது. ஆனால், ஏமாறியதாகக்
காட்டிக் கொள்ளாது.

பாகிஸ்தானின் அனவருக்கும் அணுசக்திக் கொள்கை

நன்றி: நியு யார்க் டைம்ஸ்








A brochure from Dr. Khan's laboratory, advertising technology used in centrifuges to make nuclear arms, was circulated to aspiring nuclear states and a network of middlemen. It was provided to The New York Times by the Institute for Science and International Security, in Washington.





பெயரிலிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்

காசியின் இன்றைய நியூக்ளியஸ் வலைப்பதிவில்
'யாரோ'க்களின் இணைய முகவரியை கண்டுபிடிக்கும் வழிகளை சொல்கிறார்.
ஹெரால்ட் ட்ரிப்யூனின் வலைப்பக்கங்களுக்கு
சென்றால் நமது கணினிக்களை நச்சரிக்கும் கிருமிகளையும்,
நாம் செல்லும் அல்லது தடுக்கி விழுந்து விடும் வலைப்பக்கங்களில்
இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிகளையும் அறியலாம்.

அரேபியாவில் இருந்து கொண்டு அமெரிக்கா என்றும், வேவு
பார்க்கும் ஓற்று நிரலிகளையும், இன்ன பிற ஜந்துக்களையும்
நம் வலை மேய்தலில் இருந்து காக்க உதவுகிறார்கள். அந்தரங்கம்
புனிதமானது!?

சத்தியமாய் நான் பெயரிலியோ, முதுகெலும்பிலனாரோ அல்ல!

மயூரா நெட் - வலைத்தமிழ் அந்தம்

சுவைத்தவை: "
'வள்ளுவர்செய் திருக்குறளை
மறுவறநன்கு உணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி
ஒருகுலத்துக்கு ஒருநீதி'

- மனோன்மணீயம்



திருக்குறளில் அடங்கியுள்ள 1330 குறள்களும் கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியாரின் ஆங்கில மொழியாக்கத்துடனும், பேராசிரியர் - டாக்டர் மு. பெரி. மு. இராமசாமி அவர்களின் எளிய உரையுடனும் பகுதி பகுதியாகப் பிரித்து இவ்வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த இணைப்பினை அழுத்தி அவற்றினைப் பார்வையிடலாம். "

புத்தக அறிமுகங்கள் - ஆர். பொன்னம்மாள் (5)

கடவுளின் கருணை, கல்லுக்குள் ஈரம், புடமிட்ட பொன், மனமாற்றம் முதலான நான்கு கதைகள் கொண்ட முதல் தொகுப்பு பழனியப்பா பிரதர்ஸ் மூலமாக வெளியிடப்பட்டது.

புடமிட்ட பொன்: ஒரு சிறுவன் வீட்டை விட்டுப் போனால் எப்படிபட்ட துன்பங்களை அனுபவிக்க நேரிடும், பெற்றோரை தண்டிப்பதாக எண்ணி அவன் வாழ்க்கையை அவலப்படுத்திக் கொள்ளும் விதத்தை சித்தரிக்கிறது. இதைப் படிக்கும் சிறுவர், சிறுமியர் வாழ்க்கை என்பது, திரைப்படம் அல்ல. பணக்காரன் கையில் செல்லக் குழந்தையாய் வாழ்வோம் என்பது கனவு என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

தந்தை மகனை டேபிள் துடைப்பவனாகப் பார்த்தும் கூட கண்ணீரை சொரியாமல், கட்டிப் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வா என்று அழைக்காமல் பேசுவது பெற்றோருக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று உணர்த்தலாம்.

கல்லுக்குள் ஈரம் பொல்லாதவனான ஒரு பையனின் கல் போன்ற மனதிலுள்ள ஈரத்தை ஒரு சிறுமி பொறுமை என்னும் உளி கொண்டு உடைத்து வெளிபடுத்தும் விதத்தை சொல்லும் கதை. (இரண்டாம் பரிசு என்பது சற்றே வயதான குழந்தைகளுக்கு என்பதாலே என்று விழாவில் திரு. எம். எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

கருணை விழிகள்: மோகன் ஏழைச் சிறுவன். சென்னைக் கடற்கரையில் சுண்டல் விற்பவன். பெற்றோரை இழந்த அவனுக்கு பாட்டி மட்டுமே உறவு. ஏழையாலும் பிறருக்கு உபகாரமாக வாழ முடியும் என்பதை உணர வைக்கும் நாவல். பாட்டியின் கருணை நிரம்பிய விழிகள் சாகாமல் மோகனோடு படிப்பவர் விழிகளையும் ஈரமாக்குகின்றன. இது வானதி பதிப்பகத்தாரின் 1984-ம் ஆண்டு வெளியீடு.

அன்பு உள்ளம்: ராஜேஷ¤ம், அவன் தங்கையும் விடுமுறையில் மாமா வீடு சென்று பின்னர் காணாமல் போய் பெற்ற அனுபவங்களைச் சொல்லும் சிறுவர் நாவல். 1978-இல் பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு. இதை வெளியிட்டவர் கவர்னராயிருந்த திரு. பட்வாரி அவர்கள்.

(சிறு குறிப்பு வளரும்)

சனி, ஜனவரி 03, 2004

பாரிஸ் ஹில்டன் (பாரிஸின் ஹில்டன் அல்ல :)

Paris Hilton

பாரிஸ் ஹில்டன்

Dominos Pizza and some useless Research

பாரிஸ் ஹில்டனை அறியாத அமெரிக்கர்கள் அரிது.
ஹில்டன் ஹோட்டல் என்னும் பெயர் கேள்விபட்டதாக இருந்தாலும்,
சுய அடையாளத்துக்காக 'முப்பதே நாட்களில் முன்னூறு
மில்லியன் செலவழிப்பது எப்படி' என்று செய்து காட்டி
புகழ் பெறுபவர். பணக்காரர்கள் மத்தியில் மட்டுமே தன்னுடைய
பெயரை நிலை நாட்டியவர், இணையத்தின் உபயத்தால்
இப்போது சன் டிவி, ரேடியோ மிர்ச்சி வரை அடிபட
ஆரம்பித்துள்ளார்.

போதையில் மயக்கமுற்ற நிலையில், பாய் ·ப்ரெண்ட் காம லீலா வினோதங்களைப் படம் பிடித்து 'யாம் பெற்ற இன்பம் ...' என இணையத்தில் ஒரு இரண்டு நண்பர்களுக்கு அனுப்ப, அவர்கள் ஒரு நாலு பேருக்கு அனுப்ப, இன்று பட்டி தொட்டி எங்கும் 'ஹில்டன் வீடியோ பார்த்தாச்சா' என்று புள்ளி ராஜா
அளவுக்கு செல்வாக்குடன், ·பாக்ஸ் டிவியிலும் 'கதையல்ல...
நிஜம்' மாதிரி ஒரு நிஜ நாடகம் நடத்துகிறார்.

டாமினோஸ் பீட்ஸா வரவழைப்பவர்கள் அதிகம் சொல்லும்
போலி பெயர் 'பாரிஸ் ஹில்டன்'. அண்களுக்கு அமெரிக்காவின் அட்டர்னி
ஜெனரல் ஜான் ஆஷ்க்ரா·ப்ட் பெயர் பயன்பட்டிருக்கிறது. ஜனநாயக கட்சி
சார்பாக நிற்க போகும் ஹோவார்ட் டீனின் ஆதரவாளர்கள், ஜார்ஜ் புஷின்
கட்சிகாரர்களை விட அதிகம் அன்பளிப்பு வழங்குகிறார்கள். அம்மணமாகக் கதவை
திறப்ப்வர்களும் இருக்கிறார்கள். காது, மூக்கு, வாய் என வளையம் இன்ன
பிற சொருகிக் கொண்டவ்ர்களை விட அரைகுறை ஆடையாளர்கள்
அதிகம் வழங்குகிறார்கள்.

சதாமை கைப்பிடித்த அன்றும், மடோனாவும் ப்ரிட்னியும் பின்னிப்
பிணைந்து கிஸ் அடித்த எம்டிவி விழா அன்றும் தாராளமாகக்
கொடுத்திருக்கிறார்கள்.

நம்ம ஊரு டாமினோஸ் மக்களிடம் tip வருகிறதா,
என்று அதிக அளவு விற்பனையாகிறது, என்ன
பெயர் சொல்லி அழைக்கிறார்கள் (எவ்வளவு சிம்ரன்),
எப்படி எதிர்கொண்டு அழைக்கிறார்கள் போன்ற
விவரங்களை கேட்டு சொல்லுங்களேன்!

மேலும் பீட்ஸா அன்பளிப்பு விவரங்கள்

குழந்தை எழுத்தாளர் சங்கம் - ஆர். பொன்னம்மாள் (4)

தாய்மாமன் வீட்டிலிருந்த என் அன்னை தன் மாமன் மகனை மணக்க 'எழுதக் கூடாது', என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. பாட்டியின் கண்ணீர் அன்னையின் பேனாக்களை மூடிக் கொள்ள வைத்தது.

முதல் கதை பிரசுரமான நாள்: நவ. 28, 1956
திருமணமான நாள்: ஜன. 28, 1958.

தந்தையின் அனுமதியோடு சில கதைகள் மீண்டும் பிரசுரமாக ஆரம்பித்தது. முதல் குழந்தை பிறந்த நாள்: ஜன. 19, 1960. ஆறாவது மாதம் ஜுரத்தில் அந்தக் குழந்தை மடிந்ததால் தன் எழுத்துப் பணியைத் துறந்த என் தாய் குடும்பமே உலகம் என வாழ்ந்தார்கள்.

என் தமையனுக்கு 15 வயது. என் தமக்கைக்கு 13 வயது. என் தந்தை விரும்பிப் படிக்கும் 'தினமணி' நாளிதழில் குழந்தை எழுத்தாளர் சங்க (கு.எ.ச.) சிறுகதைப் போட்டி அறிவிப்பு வெளி வந்திருந்தது. அக்காவும், அண்ணனும் தூண்ட மீண்டும் எழுத ஆரம்பித்தார்கள்.

நவ. 13, 1976 அன்று 'எல்.எல்.ஏ. பில்டிங்கில்' (தேவநேயப் பாவாணர் நூலகத்தில்) ஏவிஎம் பரிசளிப்பு விழா நடக்கப் போவதாகவும், என் தாய்க்கு இரண்டாம் பரிசு கிடைத்திருப்பதாகவும் கடிதம் வந்தது. இப்போது எங்கள் குடும்பத்துக்கே இறக்கை முளைத்திருந்தது. விழாவில் கலந்து கொண்டு பரிசை வாங்கி வந்தோம்.

(கொஞ்சம் இடைச் செருகல்: கு.எ.ச.வின் 1978 வரலாற்றுப் போட்டியில் கலந்து கொண்ட என் சகோதரியும், 'திரு.வி.க. வாழ்க்கை வரலாற்று'க்கு ஏவிஎம் வெள்ளிப் பதக்கம் பெற்றாள்.)

1983-இல் என் தாய் எழுதிய 'கருணை விழிகள்' என்ற நாவல் கு.எ.ச. மூலமாக முதல் பரிசான தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றுத் தந்ததோடு, கோகுலத்தில் தொடராகவும் வெளிவந்து சிறுவர்களிடையே பெரும் பாராட்டினை பெற்றது.

(சிறு குறிப்பு வளரும்)

வெள்ளி, ஜனவரி 02, 2004

காஷ்மீர்... ப்யுடிஃபுல் காஷ்மீர்

வாத்து ஜோசியம் மூட நம்பிக்கைதான். ஒத்துக் கொள்கிறேன்.

ஆனால் கிடைக்கும் ஆதாயங்கள் பல:

1. பாகிஸ்தானிடம் 'kashmir' என்று ஒன்று இல்லவே இல்லை
என்று சத்தியம் செய்யலாம்.
2. kashmir பிரசினையை தீர்த்து விட்டதாக அறிவிக்கலாம்.
3. அரசாங்கக் கோப்புகளின் பெயர் மாற்ற, பலகைகள் எழுத,
பயணசீட்டுகளை மாற்ற என்று செலவழித்து பணபுழக்கத்தை
அதிகரிக்கலாம்.
4. JKLF போன்ற அமைப்புகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற
ஒரு குட்டி நகரை POK-இல் அமைத்து Kashmir என்று
பெயர் சூட்டி விட்டு, தாரை வார்க்கலாம்.

புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு