வெள்ளி, ஏப்ரல் 28, 2006

Tips on 'How to' Advice

துப்பு கொடுக்க பத்து துப்புகள்


  1. பத்து துப்புகள் வழங்குவது சிறப்பு; 10+கொசுறு, ஒன்பது கட்டளை, எட்டு எட்டா மனுசன் வாழ்வைப் பிரிச்சுக்கோ என்று துப்பினால் சாலச் சிறப்பு. (காட்டாக, ஜெயலலிதாவுக்காக எழுதினால் 9, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கினால் 13).

  2. உங்களால் வழங்கப்படும் துப்புகளை, நீங்கள் கடைபிடிக்காமல் இருப்பது சிறப்பைத் தரும். (காட்டாக, கண்ணியமாக எழுத ஆலோசனை கொடுக்கும்போது, பயன்படுத்தக் கூடாத சுடுசொற்கள் என்று ஒரு துப்பு கொடுக்கவும்).

  3. பொத்தாம்பொதுவாக வலைப்பதிவருக்கு டிப்ஸ் என்பதைவிட, பெயர் போட்டு குறிப்பிட்ட வலைப்பதிவருக்கு டிப்ஸ் என்றால், ஏழு வாசகர்களே மீண்டும் மீண்டும் துப்பைப் படிக்க ஓடோடி வருவார்கள். (பல வலைப்பதிவர்கள் ஏற்கனவே இதை சிறப்பாக அனுசரிப்பதால் எடுத்துக்காட்டுக்கே வேலையில்லை).

  4. துப்புக்கு எதிர்துப்பு வழங்குமாறு துப்புகளைத் தொடுக்கவும். (காட்டாக சென்ற புல்லட்டில், 'ஏழு' வாசகர் யார், எந்த வலைப்பதிவர்கள் சகாக்களுக்கு தலைப்பு அந்தஸ்து கொடுக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா என்னும் அனானி கேள்வி எழவைக்கவும்).

  5. எந்தத் துப்பு வழங்கினாலும், தொழில் நுட்ப சங்கதிகள் ஒன்றிரண்டை சொருகி விடவும். (காட்டாக, கவிதை நன்றாக அமைய முரசு அஞ்சலைக் கொண்டு தட்டச்சவும்.)

  6. மறுப்புக்கூற்றுகள் இல்லாமல் துப்புகள் கொடுக்காதீர்கள். (காட்டாக, என்னுடைய துப்புகள் அவார்டு படம் பார்க்கிற மாதிரி என்ன சொல்லவருகிறது என்று புரியவில்லை போல் தோன்றினால் அது சிறுவனின் அறியாமுயற்சி என்று விட்டுவிடவும்).

  7. மன விகாரங்களை ஆலோசனகளாக எழுத்தில் வடிக்காமல், உங்கள் நோட்பேடில் எழுதிக் கிழித்து விடல் அல்லது கடாசிவிட்டு 'குப்பைத் தொட்டி'யையும் காலியாக்கி (சந்தேகமாக இருந்தால்) கடின இயக்கியை (hard-drive) format-உம் செய்துவிடல் நலம்.

  8. சிறுகதை இலக்கணம் என்று பாரா சொல்பவற்றில் சில துப்பு விநியோகிகளுக்கும் பொருந்தும்.

  9. யார் யாரோ சொன்னதன் தொகுப்பாக இருந்தால் மூலங்களை குறிப்பிட்டு திரட்டு என்று சொல்லிவிடவும் அல்லது திருட்டு தர்ம அடி கிடைக்கும்.

  10. இலவசமாக எளிதாக வழங்கக் கூடியது அட்வைஸ்தான். எனவே, பதிவெழுத விஷயம் இல்லாவிட்டால் 'டிப்ஸ்' பதிவு இடவும். (காட்டாக, எந்த விஷயத்திற்கு துப்பு தருவது என்று விளங்காவிட்டால், துப்பு கொடுக்க துப்புகள் கொடுக்கவும்).





| |

Cinematographer U.K. Senthil Kumar

நிகழ்ச்சி: முதல் பயணம்
தொலைக்காட்சி: கே டிவி
பேசுபவர்: ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில்குமார்
பங்காற்றிய சில திரைப்படங்கள்: உள்ளத்தை அள்ளித்தா, அருணாசலம், முறை மாமன்.
பேட்டியாளர்: ப்ரியதர்ஷிணி

Cinematographer U.K. Senthil Kumar's Introduction in Sun TV 'Muthal Payanam' - Cameraman of 'Ullathai Alli Thaa', 'Murai Maaman' - an audio post - click to play



மணிவண்ணனுடன் வேலை பார்த்த முதல் பட அனுபவம் மற்றும் FAO (UN)இல் வேலை பார்த்தபோது நிகழ்ந்த ஒடுக்குமுறை:

Cinematographer U.K. Senthil Kumar's Introduction in Sun TV 'Muthal Payanam' - Cameraman of 'Ullathai Alli Thaa', 'Murai Maaman' : an audio post - click to play


நன்றி: கே டிவி


| |

வியாழன், ஏப்ரல் 27, 2006

One Block; One Joke

அலுவலில் காமதேனு.காம் செல்ல முடிவதில்லை. 'அட்வகஸி' என்று சொல்லி வெப்சென்(ஸார்) செய்கிறது. ஒரு வேளை பெயரின் துவக்கத்தில் 'காம' இருப்பதினால் காமசூத்ராவிற்கும் காமதேனுவிற்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியவில்லை போல!?


Kamadenu Site Blocked @ Work




x=5 என்று குருட்டாம்போக்கில் கணக்குப் போட்டுப் பேந்தப் பேந்த விழித்த பிறகுதான் மண்டைக்கு விளங்கிச்சு :-))) (லேட்டரல் திங்கிங் என்பது இதுதானா?)

Can U Laugh?




|

புதன், ஏப்ரல் 26, 2006

How Balaji Wrote Blog, Translate Stuff and Made up Gilli

காவ்யா என்ன செய்து விட்டார்(ள்)
எழுதியவர்: பாஸ்டன் பாலாஜி

(கா) இந்தப் பதிவில் உள்ள கட்டுரையின் முழு உரிமை, ஆசிரியரை (அதாவது என்னைச்) சாரும். இக்குறிப்பிட்ட கட்டுரையில் இருந்து பகுதிகளை எடுத்தாள்வதோ, சில பகுதிகளை மட்டும் பயன்படுத்துவதோ, வேறு வகைகளில் மறு பிரசுரம் செய்வதோ, அச்சு மற்றும் மின் ஊடகங்களில் மறு பதிப்பிடுவதோ, கப்புரிமைச் சட்டப்படி தடை செய்யப்பட்டதாகும். மதிப்புரைகள், விமர்சனங்களின் தேவைக்கேற்ப இந்நூலின் சில பகுதிகளை மேற்கோளாக எடுத்துக்காட்டுவது இவ்வகையில் சேராது.

காவ்யா விஸ்வநாதன் என்று ஓர் இளம் படைப்பாளி. அவரின் நாவலிலுள்ள சில பகுதிகள் இன்னொரு படைப்பாளியின் கதையிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதாக குற்றம் எழுந்துள்ளதையொட்டி சர்ச்சை எழுந்துள்ளது. அந்த படைப்பாளியின் எழுத்தைப் படித்திருப்பதாகவும், அவரது கதை தான் மிகவும் ரசித்தவை என்று அவர் சொல்லியிருக்கிறார். அவர் உணராமலே இது நடந்திருக்கலாம் என்று அவர் சொன்னாலும் பிரச்சினை சால்வ் ஆகப் போவதில்லை. ஏனெனில் காவ்யா செய்தது முறையான பயன்பாடு (fair use) என்பதன் அடியில் வராது. அவர் எழுதியது அந்த கதையைக் கிண்டல் செய்தும் அல்ல. அதே சமயம் இவர் எழுதிய படைப்புக்கும், அந்த படைப்புகளுக்கும் கதையின் மையக்கரு, கதாபாத்திரங்கள், கதையில் வரும் நிகழ்வுகள் ஒற்றுமைகள் இருக்கின்றனவா என்பதையும் கண்டறிய வேண்டும்.அப்படி இருப்பின் அதை தற்செயல் என்று ஒதுக்கிவிட முடியாது. ஒரே மாதிரியான கதைக்கருவினை பல கர்த்தாக்கள் எழுதலாம். ஒருவருக்கொருவர் அறியாமல் இது வெளியாக வாய்ப்பிருக்கிறது. ஆனால் இங்கு நடந்திருப்பது வேறு. காவ்யாவின் நாவல் வெளிவருவத்ற்கு முன்னரே அந்த நாவல்கள் வெளியாகியுள்ளன, காவ்யாவும் அவற்றைப் படித்துள்ளார். பின் இது எப்படி நடந்திருக்கும்.

ஒரு சாத்தியக் கூறு எழுதும் போது ஒரு மாதிரிக்காக அவர் இந்த நாவல்களிலிருந்து சிலவற்றை எழுதிவைத்திருந்திருக்கலாம். அவரது நாவலை செதுக்க ஒரு நிறுவனம் உதவி செய்திருக்கிறது.அவர் முதலில் சில பக்கங்களும், நாவலின் சுருக்கமும் கொடுத்திருக்கிறார். ஒப்பந்தம் கையொப்பான பின்னர்தான் முழு கதையும் விட்டார். அதை செப்பனிட ஒரு நிறுவனம் உதவியிருக்கிறது. படைப்பாளியின் எழுத்தை வெளியிடத்தக்க பிரதியாக உருமாற்ற இந்த நிறுவனம் உதவியிருக்கிறது. இதில் புதுமை ஏதும் இல்லை. இப்படி பிரதியை செப்பனிடும் போதோ அல்லது கதையை எழுதும் போதோ இது மாதிரி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. நாவலை குறிப்பிட்டகாலக கெடுவிற்குள் எழுத வேண்டும் என்ற பரபரப்பில் அவர் எழுதும் போது அவர் எழுதி வைத்திருந்ததும் நகல் எடுத்திருந்த பத்திகளும் கலந்து கலந்திருக்கலாம்.

அவர் அறியாமலே சில பத்திகளை தன் குறிப்புகள் என்று நினைத்து பிரதியில் சேர்த்திருக்கலாம். அல்லது இறுதி வடிவம் பெறும் போது குறிப்புகளிலிருந்து சிலவற்றைச் சேர்த்திருக்கலாம்.கவனகுறைவினால் எதை எங்கிருந்து எடுத்தோம் என்பதை அவர் சிந்திக்காமல் சேர்த்திருக்கலாம்.

இது போன்ற சர்ச்சைகள் நீண்ட ஆய்வறிக்கைகள் எழுதும் போதும் எழும். குறிப்புகளில் ஆதாரங்களைக் குறிப்பிடாமல் விட்டால் இது நமது கருத்தா அல்லது எங்கிருந்தாவது எடுத்தோமா என்ற அய்யம் எழும். ஆய்வாளர்கள் இதைத் தவிர்க்க சில உத்திகளை கையாள்வர். கதை எழுதும் போதும், பின்னர் அதை மீண்டும் படித்து, எழுதி செப்பனிடும் போது அவர் அது போன்ற துப்புகளை கையாண்டிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இந்தப் விஷயம் எழுந்திராது.

சட்டரீதியாகப் பார்த்தால் அவர் செய்தது சரியல்ல, அது திருட்டுத்தான். பதிப்புரிமை என்பது எண்ணங்களின் (ideas) மீது சொந்தம் கொண்டாட அனுமதிக்கவில்லை. விளக்கமாக சொல்லும் சொற்றொடரின் வடிவின் (expression) மீது தான் பந்தம் கொண்டாட முடியும். ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் சேர ஒரு மாணவர் படும் அவஸ்தைகள் என்பது எண்ணமென்றால் அதை வைத்து நான் ஒருவன் தான் கதை எழுதுவேன் என்று உரிமை கொண்டாடமுடியாது. அதை வைத்து நான் ஒரு கதை எழுதி வெளியிட்ட பின் அதே போன்ற கதைகளன், கதாபாத்திரங்கள், நிகழ்வுகளை வைத்து ஒருவர் நாவல் எழுதினால், என் நாவலைத் தழுவி அவர் எழுதினார் என்று வழக்குத் தொடரலாம். காவ்யா எழுதிய நாவலுக்கும், அந்த நாவல்களுக்கும் இந்த வகையில் பெரும் ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே அவர் செய்திருப்பது பல பத்திகளை பிறர் நூலிலிருந்து பயன்படுத்தியிருப்பதும், அதை தன் பெயரில் வெளியிட்டதும். அந்த நூற்களின் பதிப்புரை யாரிடம் இருக்கிறதோ அவர் நஷ்ட ஈடு கோரலாம், மேலும் சர்ச்சைக்குரிய பத்திகளை நீக்க வேண்டும் என்றும் கோரலாம்.

இதில் காவ்யாவின் பங்கைவிட கதையை செப்பனிட உதவிய நிறுவனத்தின் பங்கு அதிகம் என்று நிரூபிக்கப்பட்டாலும் காவ்யா தன் பொறுப்பினை தட்டிக்கழித்து விட முடியாது. ஏனெனில் அவர்தான் கதாசிரியர் என்று கூறிக்கொண்டவர், அங்கீகரிக்கப்பட்டவர். மேலும் ஒப்பந்தம் அவருக்கும், வெளியீட்டாளருக்கும் இடையேதான் இருப்பதால் வெளியீட்டாளரைப் பொறுத்தவரை காவ்யாவே பொறுப்பாவார். பொதுவாக இது போன்றபிரச்சினைகள் எழக் கூடும் என்பதால் பதிப்பகங்கள் நூலாசிரியருடன் போடும் ஒப்பந்த்தில் இலக்கியத் திருட்டு, அனுமதியற்ற பயன்பாடு போன்ற வழக்குகள் போடப்பட்டால் அவற்றிற்கு கதாசிரியர் பொறுப்பு அல்லது அது குறித்த வழக்குகளில் பதிப்பாளருக்கு ஏற்படும் செலவினை, நட்டத்தினை ஏற்க வேண்டும் என்று ஒரு விதியை போட்டிருப்பார்கள்.

இந்த பிரச்சினைக்குத் தீர்வாக சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு மாற்றி எழுதிக் கொடுத்து புத்தகத்தை வெளியிட வாய்ப்புள்ளது.

இப்போது தேடியுள்ள சுட்டிகளை வைத்து இவ்வளவே எழுத முடியும்.


பாலாஜி என்ன செய்து விட்டார்(ன்)

வலைப்பதிவில் புகழ்பெற்ற பாலாஜி ரவி ஸ்ரீனிவாசின் குறிப்புகளில் இருந்து அப்படியே திருடியுள்ளது தெரிய வந்துள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு காவ்யா விஸ்வநாதனின் புத்தகம் தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து ரவி எழுதினார். இன்று அதைக் குறித்து எழுதிய பாலாஜி, ரவியின் கட்டுரைய அடியொற்றி அப்படியே பிரதியெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இணைய நண்பர்கள் பாலாஜியைத் தொடர்பு கொண்டபோது அவர் 'இந்த செய்கை தன்னையறியாமல் நிகழ்ந்த ஒன்று' என்றார். "என்னுடைய வலைப்பதிவுக்கு ரவியின் கண்ணோட்டங்கள் பயனுள்ளதாக இருந்திருக்கிறது. அவரின் கருத்தோடு பல சமயம் ஒத்துப் போயும் இருக்கிறேன். என் எண்ணங்களை அவர் மொழியிலேயே எழுதுவது ஆச்சரியமும் வருத்தமும் அளிக்கிறது" என்று தொடர்ந்தார்.

குறிப்பிட்ட ரவி ஸ்ரீனிவாசின் பதிவை பாலாஜி படித்தும் இருக்கிறார்.

கில்லியில் பாலாஜியின் பதிவை எடுத்துப் போட்டிருந்த பிரகாஷ் இந்தப் பிரச்சினை குறித்து பேசும்போது, "ரவியின் பதிவோடு ஒப்புநோக்காமல் பரிந்துரைத்தது என்னுடைய தவறுதான். கில்லியின் அடுத்த பரிந்துரைகளில் கவனமாக இருக்கப் போகிறோம். இருவர் எழுதும் ஒத்த பத்திகளில் இருந்து மேற்காள் காண்பிக்க மாட்டேன்" என்று முடித்துக் கொண்டார்.



|

Drunkards' Divorce

தலாக் போதை

ஈரானுக்கு நீங்கள் தொலைபேசினால் அது அமெரிக்காவால் ஒட்டுக் கேட்கப்படும். தெரியாத்தனமாக 'நான் வெப்பன்ஸ் ஆஃப் மாஸ் டிஸ்ட்ரக்ஷன் குறித்து வலைப்பதிவு செய்திருக்கிறேன்' என்று நண்பரிடம் அளந்தால், ஐ.நா.விடம் அமெரிக்கா "அமெரிக்காவை அணுகுண்டு கொண்டுத் தாக்க ஈரான் திட்டமிடுகிறது. இதற்கு ஆதாரம் உண்டு" என்று அறிவித்து ஈரான் மீது போர் தொடுக்கலாம்.

ஒட்டுக்கேட்கப்படும் உப்புப்பெறாத... சாரி... அரிசி பெறாத விஷயங்கள், பூதாகாரமாக விசுவரூபம் எடுக்குமா? ஒரிஸ்ஸாவில் எடுத்திருக்கிறது.

/">கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன் குடிபோதையில் இருந்த ஷேர் மொஹமத் அலி உளறியதை ஒட்டுக் கேட்டதால், அவரின் குடும்பமே ஊருக்கு பயந்து வாழ்ந்து வருகிறது. பதினொரு வருடமாக குடித்தனம் செய்த மனைவி நஜ்மா பீவியிடம், 2003 ஜூலை ஐந்தாம் தேதி, தண்ணியடித்துவிட்டு 'தலாக்... தலாக்... தலாக்...' சொல்கிறான்.

'டாஸ்மார்க்-காரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு'; தேர்தல் இலவச வாக்குறுதியை, மந்திரிசபை அமைத்தவுடன் மறந்துவிடும் அரசியல்வாதியாக, அடுத்த நாள் காலையே மறந்தும் விடுகிறான்.

வழக்கமான தன்னுடைய லாரி டிரைவர் பணிக்கு செல்ல ஆரம்பித்து, வாழ்க்கை வழக்கம் போல் நடக்கிறது.

'பகலில் பக்கம் பார்த்து பேசு; இராத்திரியில் அதுவும் பேசாதே' என்னும் ஔவையார் காலத்துப் பழமொழியை மறந்ததால், அண்டை அயலார் ஒட்டுக் கேட்டு, உள்ளூர் மார்க்கப் பெரியோரிடம் வத்தி வைக்கிறார்கள். அவர்களும் தங்கள் பணியை செவ்வனே நிறைவேற்ற, இருவரையும் பிரிந்து வாழுமாறு பணிக்கிறார்கள்.

லாபம் சாரா அமைப்பு (என்.ஜி.ஓ) 'ஆஷியானா'வின் உதவியுடன் தாம்நகரில் இருக்கும் மௌலானா இஸ்லாமுதீனை சந்திக்கிறார்கள். தெளிவற்ற குடியுண்ட நிலையில் சொன்ன 'முத்தலாக்' செல்லாது என்று மார்க்க அறிஞர் மௌலானா மொழிகிறார். பிரிந்தவர் இணைகிறார்கள்.

சன்னி முஸ்லீம்களை தொண்ணூறு சதவீதம் கொண்ட கண்டபானியா (Kantabania)வில் மொத்தமாக ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கான உள்ளூர் ஜமாத் (Choudah Mohalla Muslim Jamat) பிரமுகர் பல்லூ சர்தார், அலி-நஜ்மாவின் வீட்டிற்கு சென்று கைகலப்புக்குப் பிறகு இருவரையும் மீண்டும் பிரித்துவைக்கிறார். ஜமாத்தின் தலைவர் ஷேக் அப்துல் பாரி, தாம்நகருக்கு சென்று வேறொரு மார்க்க அறிஞரான முஃப்தி ஷேக் க்வாஸிமை அணுகி 'குடிபோதையில் உளறினாலும் முத்தலாக் செல்லுபடியாகும்' என்று தீர்ப்பு வாங்கி வருகிறார்.

தேசிய மகளிர் அமைப்பின் (National Commission for Women - NCW) உதவியை தம்பதியர் நாடுகிறார்கள்.

கட்டாக்கில் இருக்கும் குடும்ப நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படுகிறது. டிசம்பர் 12, 2003 அன்று கட்டாக் குடும்ப நீதிமன்றம் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்காகத் தீர்ப்பளித்தது. தீர்ப்பை நடைமுறைப்படுத்த, காவல்துறை உதவ மறுக்கிறது. ஊரை விட்டுத் தள்ளி வைத்தப் பெரியோர்களுக்கு சாதகமாக காவல்துறை செயல்படுகிறது. தம்பதியர்களால் தங்கள் வாழ்வைத் தொடர முடியவில்லை.

உள்ளூர் மார்க்க அறிஞர்களை சமாதானம் செய்ய, மே 21, 2004 அன்று ஐந்து பேர் கொண்ட குழுவை, கண்டபானியா கிராமத்திற்கு NCW அனுப்புகிறது. இந்த செய்கை 'அயலாரின் தலையீட்டை ஒப்புக் கொள்ளமாட்டோம்' என்று ஜமாத்தை கொதித்தெழ செய்கிறது. மௌன ஊர்வலாமாக ஜூன் 3, 2004 அன்று இஸ்லாமிய சட்டத்தை நிலைநிறுத்துவதற்காக பேரணி நடக்கிறது.

சமரசமாக மார்க்க அறிஞர்கள், நஜ்மாவும் அலியும் மீண்டும் குடும்பம் நடத்த 'ஹலாலா'வைப் பரிந்துரைக்கிறார்கள். இதன்படி நஜ்மா வேறொருவனை மணப்பாள். அவன் நஜ்மாவுக்கு முத்தலாக் கொடுப்பான். அதன் பின், மீண்டும் கணவன் அலியுடன் மறுமணம் புரிந்து கொள்ளலாம்.

இதற்கு ஒப்புக்கொள்ளாத நஜ்மாவின் பெற்றோர் குடும்பம் - ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்படுகிறது. குடிக்கத் தண்ணீர் கூட கிடைக்காத நிலை. தேசிய மகளிர் அமைப்பின் உதவியுடன் வாசலில் கை-பம்பு அமைத்துத் தரப்படுகிறது.

உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார்கள். உயர்நீதிமன்றம் தலையிட மறுத்து, ஏப்ரல் 18, 2005 வழக்கை தள்ளுபடி செய்கிறது.

அதன் பின், ஒரு வருட உச்சநீதிமன்றப் போராட்டத்திற்குப் பின்,

"இந்தியா போன்ற மதச்சார்ப்பற்ற ஒரு நாட்டில் தம்பதிகள் ஒன்றாக வாழ்வதை தடுக்க யாருக்குமே உரிமை இல்லை என்று குறிப்பிட்டது. தமது சமூகத்தினரால் தள்ளி வைக்கப்பட்டுள்ள இந்த தம்பதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை"
என்று தீர்ப்பளித்துள்ளது.

நஜ்மாவின் அத்தை கைரூன் பீவி 'உடனடியாக, இந்த கொடூரமான, நியாயமற்ற முத்தலாக் முறையை தடை செய்ய வேண்டும். மதத்தை ஆயுதமாக வைத்துக் கொண்டு, எங்களை, ஆண்கள் பூஜ்யமாக்கி விட்டார்கள்' என்று உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்றிருக்கிறார். நஜ்மாவின் அம்மா நசீமா பீவியும் முத்தலாக் சட்டத்தில் மறுமலர்ச்சிக்கு விண்ணப்பம் வைக்கிறார்.

இருபத்தியாறு வயதான நஜ்மா தன்னுடைய பெற்றோர் வீட்டில் நான்கு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சொந்த ஊரில் பிழைப்பு நடத்த முடியாததால் நாற்பது வயதான கணவர் ஷேர் அலியும் 140 கிலோமீட்டர் தாண்டி தனியாக இருக்கிறார்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்குப் பிறகாவது இருவரும் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்ப முடிகிறதா? இருவரும் சேர்ந்து வாழ இயலுமா?


ஓரிஸாவின் ஜமாயத் உலாமா (Jamiat Ulama) தலைவர் மௌலானா சாஜிதீன் க்வாஸ்மி: "அவர்களுக்கு அரசு பாதுகாப்பு கிடைக்கலாம். ஆனால், நாங்கள் அவர்களை இணைந்து வாழ அனுமதிக்க மாட்டோம். மீறினால், இஸ்லாமிய மர்க்கத்தில் இருந்து அவர்களை நீக்குவோம்.

மதம் சம்பந்தமான விஷயங்களில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. மற்ற வழக்குகளில் கவனம் செலுத்துவதோடு அவர்கள் நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும். தீர்ப்பு கொடுப்பதற்கு முன் மார்க்க அறிஞர்களையும் மத நிறுவனங்களையும் ஆலோசித்திருக்க வேண்டும்".


உள்ளூர் ஜமாத் தலைவர் மொஹமது அப்துல் பாரி: "அவர்கள் சேர்ந்து வாழ்வதை நாங்கள் தவிர்க்கவே இல்லை. அது உள்ளூராரின் விருப்பத்திற்குட்ப்பட்டது".


இஸ்லாமிய சட்ட அமைப்பின் (Muslim Law Board) தலைவர் கமல் ஃபரூக்கி: "இது சுதந்திர நாடு என்றும், எவருடன் வாழ விருப்பமோ அவருடன் வாழலாம் என்று உச்சநீதிமன்றம் சொன்னது சரியானதே. ஆனால், சுதந்திர நாட்டில் எல்லோரும் தங்களின் சட்டத்துக்கு உட்பட வேண்டும்;

இந்தச் சம்பவத்தில் இவர்கள் இருவரும் இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டு வாழ்கிறார்கள். அவர்களின் திருமணம் இஸ்லாமிய சட்டப்படி நடைபெற்றது. விவாகரத்துக்கும் அதுவே பொருந்தும்".


இரு உள்ளங்கள் இணைந்து வாழ விரும்புகின்றன. ஒரு மாமாங்கமாய் மணமுடித்து நான்கு குழந்தைகள் உடைய குடும்பம், கோபத்தில் சிந்திய வார்த்தையை அழிக்க முயற்சிக்கிறது. இவ்வாறு நடப்பது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல.

மேற்கு வங்காளத்தின் ஜல்பாய்குரியில் (Jalpaiguri) இதே போல் குடித்து விட்டு முத்தலாக் குழறியிருக்கிறான். அங்கும் அவர்களின் குடும்பம் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. லக்னௌவின் ·பிரங்கி மஹல் (Firangi Mahal) மற்றும் அகில இந்திய இஸ்லாமிய சட்ட மன்றம் (AIMPLB) போன்ற பல மார்க்க வழிகாட்டிகள் குடித்துவிட்டு சொல்வது செல்லுபடியாகாது என்றாலும், உள்ளூர் அமைப்புகளில் அவர்களால் தாக்கமோ மாற்றமோ ஏற்படுத்த இயலவில்லை.

பத்ராக் (Bhadrak)-இல் மட்டும் குறைந்தது ஐம்பது சன்னி குடும்பங்களில் இந்த 'குடிபோதை முத்தலாக்' பிரச்சினை நீடித்து வருகிறது. நஜ்மாவின் நிலை மட்டுமே நீதிமன்றப்படிகளைத் தொட்டு அல்லலுக்குள்ளாகி இருக்கிறது. மற்ற மனைவியர் அனைவரும் இந்தத் தீர்ப்பின் சுமுக முடிவை ஆவலுடன் எதிர்நோக்குகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்தால், பிரிந்த பல குடும்பங்கள் ஒரிஸாவில் சேர்ந்து வாழ முன்னோடியான தீர்ப்பாக இது இருக்கப் போகிறது.

ஒரு பில்லியனைத் தாண்டிய இந்தியாவின் மக்கள் தொகையில் 13.4% இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர்கள். சொத்து விவகாரம், திருமணம், பூர்வீக உரிமை, விவாகரத்து போன்ற தனிநபர் சம்பந்தமான பிரச்சினைகளில் இஸ்லாமிய சட்டத்தை அனுசரிக்கிறார்கள்.

தூக்கத்தில் உளறிய 'முத்தலாக்'கால் விவாகரத்து; பங்காளி சண்டையில் கொண்ட பிணக்கினால், அண்ணனுக்கு வாக்களித்த கோபத்தில் முத்தலாக் என்று விவாகரத்து குழப்பமாக நொடிநேர விளையாட்டாகக் கையாளப்பட்டு வருகிறது.

சென்ற வருடம் AIMPLB வெளியிட்ட 'திருமண ஒப்பந்தத்திற்கான மாதிரி வழிமுறைகள்' இப்பொழுது முக்கியத்துவம் பெறுகிறது.
  • வாய்மொழியப்படும் 'தலாக்; தலாக்; தலாக்...' செல்லுபடியாகாது
  • அனைத்து விவாகரத்துகளும் காஜியார்களிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும்

    இந்தியாவின் உச்சநீதிமன்றம் கரிசனத்தோடு இந்த வழக்கை அணுகி தீர்ப்பு வழங்கியுள்ளது. தனி மனித சுதந்திரத்திற்கு ஊறு விளைவிப்பதாக இஸ்லாமிய சட்டங்கள் இயங்கக் கூடாது. தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள மார்க்க அறிஞரின் அறிவுரையை எதிர்பார்த்திருக்காமல், பக்கத்துவீட்டுக்காரர்களின் ஒப்புதலை நோக்காமல் சுதந்திரமாக வாழ இஸ்லாமும் அனுமதிக்க வேண்டும்.



    புகைப்படம்/செய்தி: டெலிகிராஃப் | நியு கேரளா



    | |

  • செவ்வாய், ஏப்ரல் 25, 2006

    Puspavanam Kuppusamy : Tamil Proverb

    பழமொழி: உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவிப் பருந்தாகுமா?

    புஷ்பவனம் குப்புசாமி சொல்லும் பழமொழிக் கதை.
    அனிதா குப்புசாமி 'ஊம்ம்ம்' கொட்டுகிறார்.

    Puspavanam Kuppusamy : Tamil Proverb : Stories session with Anita Kuppusamy & Pushpavanam Kuppusaamy - Tamil Pazhamozhi & Vidugathai Kathaigal - this is an audio post - click to play


    கதையும் பழமொழியும் இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு யாருக்குப் பொருத்தமாக இருக்கும்!?



    | |

    திங்கள், ஏப்ரல் 24, 2006

    Rediff Buyer Experience

    ஐய்யோ இப்படி 70$ போச்சேன்னு உக்காரமா நானா வால் மார்ட்டான்னு பாக்கலாமுன்னு கிளம்பினேன். அப்போ, நம்ம ஊருல இதே மாதிரி நடந்திருந்தா என்ன ஆகியிருக்குமுன்னு ஒரு விதமான நினைவலைகள் என்னோட மனசுல அப்படியே வந்து போச்சு. சார், நீங்க வாங்கிறப்போவே இத பாத்து வாங்கி இருக்கனும் சார். நீங்க வாங்கிறப்போ அது இல்லாம இருந்ததுங்கிறத நீங்க சொல்றத நாங்க எப்படி சார் நம்புறதுன்னு கேட்ருப்பாங்க.

    நன்றி: கார்த்திக் குமார் / தூறல்

    இந்தியாவின் வாடிக்கையாளர் சேவையை மட்டம் தட்டுபவர்கள் மீது எரிச்சல் வரும். ஆனால், இன்றைய இணையச் சூழ்நிலையிலும், இணையத்திலேயே குப்பை கொட்டும் தா(த்)தாவான ரீடிஃப்.காம் ஏமாற்றுகிறார்கள் என்னும்போது கோபமும் எரிச்சலும் கையாலாகாத்தனமும் வெறுப்பும் பயமும் விஞ்சி நிற்கிறது.

    நெருங்கிய நண்பருக்காக நானும் நாலு தடவை கஸ்டமர் சர்வீஸ் தொலைபேசி, மின்னஞ்சல் எல்லாம் முயற்சித்தாகி விட்டது.
    சுத்தமாக பயன் லேது.

    தயவுசெய்து Rediff.com ஷாப்பிங் செய்யவேண்டாம்!
    அவதிக்குள்ளாக வேண்டாம்!!!

    Order Number: ***மறைக்கப்பட்டுள்ளது***
    Date: 19-feb-2006

    Details: Ojjas Childrens Educational Laptop 1
    Price : INR 399.00 (Plus, INR 50.00 For Shipping and Handling)

    Despatched: 22-FEB-2006
    Courier Number: ***மறைக்கப்பட்டுள்ளது***

    Receieved in good condition - But the product didn't work.

    Tried to Call Ojjas Enterprise phone number given - nobody picked; Tried: All times of the day in three days continuously.

    Tried to log a complaint with Rediff dot com, Got a complaint ID : Rediff#004-560-393 (Date : March 3)
    Absolutely No Response after that.

    Use Rediff for Zero ROI & Non-existent Service!




    | |

    ஞாயிறு, ஏப்ரல் 23, 2006

    Anrum Inrum - Chennai Central

    A view of the Central Railway Station as it looked in the 1920s. - 01-01-1920 (c) The Hindu

    நன்றி: தி ஹிந்து ப்படக்கோப்புகள்


    Madras Central

    நன்றி: தினமலர்



    | |

    Thuklaq - Satya

    (c) Thuglak Sathya


    வெளியான இதழ்: துக்ளக்





    | |

    வெள்ளி, ஏப்ரல் 21, 2006

    Ten Songs

    பத்துப் பாடல்

    ம்யூஸிக் இந்தியா ஆன்லைன் தயவில் சேமித்து வைத்த பாடல்களில் சில. அடுத்த பத்து சேர்ந்தவுடன் அடுத்த க்வார்ட்டருக்கு தலை பத்து தொகுக்கலாம்.

    1. வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் - சித்திரம் பேசுதடி
      குரல்: கானா உலகநாதன்
      இசை: பாபு


    2. நம்ம காட்டுல மழ பெய்யுது - பட்டியல்
      குரல்: இளையராஜா, ரோஷினி
      இசை: யுவன் ஷங்கர் ராஜா


    3. வெண்ணிலவே... மஞ்சள் வெயில் மாலையிலே - வேட்டையாடு விளையாடு
      குரல்: ஹரிஹரன், நகுல், விஜய்
      இசை: ஹாரிஸ் ஜெயராஜ்


    4. காகிநாடா சரக்குடா - சண்டே 9 டு 10:30
      குரல்: ப்ரேம்ஜி, சாம் பி கீதம்
      இசை: ஜான் பீட்டர்ஸ்


    5. புது வீடு கட்டலாமா - திருப்பதி
      குரல்: அனுராதா ஸ்ரீராம்
      இசை: பரத்வாஜ்


    6. லேலாக்கு லேலாக்கு லேலா - ஆதி
      இசை: வித்யாசாகர்


    7. பொய் சொல்லப்போறேன் - திருட்டுப் பயலே
      குரல்: கண்மணி & கே.கே.
      இசை: பரத்வாஜ்


    8. என்னம்மா தேனி ஜக்கம்மா - தம்பி
      குரல்: கார்த்திக், மாணிக்க விநாயகம், பாலேஷ்
      இசை: வித்யாசாகர்


    9. இங்கே இங்கே ஒரு பாட்டிருக்கு - பொய்
      குரல்: ஷங்கர் மஹாதேவன்
      பாடலாசிரியர்: பா. விஜய்
      இசை: வித்யாசாகர்


    10. இன்னிசை அளபெடையே - காட்ஃபாதர்
      குரல்: மஹதி, நரேஷ்
      இசை: ஏ.ஆர். ரெஹ்மான்






    | |

    வியாழன், ஏப்ரல் 20, 2006

    Elfriede Jelinek

    எல்·ப்ரீத் யெலினெக் (Elfriede Jelinek) ஆஸ்திரியாவில் பிறந்திருந்தாலும் ஜெர்மனியிலும் கொண்டாடப்படுபவர். பத்து நாவல்களையும் பதினைந்து நாடகங்களையும் எழுதியிருக்கிறார். இசை நாடகமான ஓபெரா (Opera)வையும் விட்டுவைக்கவில்லை. ஆணாதிக்கத்தை சாடியும், பாலியல் சுதந்திரத்தை வலியுறுத்தியும் படைப்புகளை எழுதுபவர்.

    2004ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் விருது பெறுவதற்கான காரணமாக 'அசாத்தியமான மொழியாளுமையுடன் எதிரும் புதிருமான குரல்களை தன்னுடைய நாவல்களிலும் நாடகங்களிலும் இசைக்கவிடுபவர். சமூகத்தில் ஊறிப்போன அவலங்களையும், அதிகார சக்திகளையும், பேரார்வத்துடன் வெளிச்சம் போட்டுக் காட்டியவர்' என்று நோபல் கமிட்டி அறிவித்தது.

    இலக்கியத்துக்கான நோபலைக் கடைசியாக 1996-இல் பெண்ணுக்கு வழங்கியிருந்தார்கள். இந்த விருதைப் பெறும் பத்தாவது பெண்மணியாக எல்·ப்ரீட் இருந்தார். விருதை நேரில் வாங்கிக் கொள்ள எல்·ப்ரீதால் செல்லமுடியவில்லை. தன்னுடைய கலை தொடர்பான மேற்படிப்பைக் கூட ஆளுமைக் குறைவினால் பாதியிலேயே கைவிட்டிருந்தார். அவருக்கு பெருந்திரளான மக்கள் முன் பேசுவது குறித்து பயமாக இருப்பதால் பதிவு செய்யப்பட்ட பேச்சை ஒளிபரப்பினார்கள். இந்தப் பிரச்சினையை பின்னணியாக அமைத்து மற்றொரு நோபல் பரிசு எழுத்தாளரான கோட்ஸீ, 'எலிசபெத் காஸ்டெல்லோ' என்னும் நாவலை எழுதியுள்ளார்.

    தன்னடக்கமா, சுய பச்சாதாபமா, எள்ளலா, என்று அறியமுடியாத பேச்சாக அவரின் நோபல் பரிசு ஒலிபரப்பு இருந்தது. 'பெண் என்பதால்தான் தனக்கு பரிசு கிடைக்கிறதோ' என்று வெளிப்படையாக கேள்வி எழுப்பி, ஜெர்மனில் எழுதும் வேறு சில நட்சத்திர எழுத்தாளர்கள் தன்னை விட தகுதி வாய்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இதன் எதிரொலியாக அடுத்த ஆண்டுக்கான, 2005 நோபல் பரிசு அறிவிப்பதற்கு சில நாள்களுக்கு முன், கமிட்டி அங்கத்தினர் ஒருவர் தன் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

    கூட்டம் சேர்ப்பதை விரும்பாவிட்டாலும், அவரின் படைப்புகள் ஆஸ்திரியாவிலும் ஜெர்மனியிலும் பெருவாரியானவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பொது வாழ்விலும் ஓரளவு பிரபலமானவரே எல்·ப்ரீத். ஆஸ்திரியாவின் வடது சாரி கட்சியை மிகக் கடுமையாக தனது படைப்புகளில் விமரிசித்து வந்தவர், அந்தக் கட்சி 2000-த்தில் ஆட்சியைப் பிடித்தவுடன் தன்னுடைய நாடகங்களை ஆஸ்திரியாவில் போடுவதை முற்றிலுமாக விலக்கி தடுத்துவிட்டார்.

    எதிர்மறையான சிந்தனைகளால் வாழ்க்கையை துயரம் மிக்கதாகவும், மனிதர்களின் கவலைகளை மட்டுமே முன்னிறுத்தி தன்னுடையப் படைப்புகளை எழுதிவந்தார் எல்·ப்ரீத். பெண்ணியத்தை முன்னிறுத்துபவர்களில் முக்கியமானவராக எல்·ப்ரீத் கருதப்படுகிறார். தானே ஒரு நாடகாசிரியராகவும், கவிஞராகவும் இருப்பதால் நாவல் வடிவில் பல மாறுதல்களை முயற்சித்துப் பார்த்து வந்தார். உதாரணமாக, அரங்க நாடகங்களில் வழமையான உரையாடல்களுக்கு பதிலாக, இசையால் வித்தியாசம் காட்டி ஒருவரின் பல்வேறு குணாதிசயங்களின் கூறுகளை முன்வைப்பதை சொல்லலாம்.

    கவிதை நடையில் இருந்து உரைநடைக்குத் தாவுவது, நாடகத்தன்மை உடைய காட்சியமைப்பில் இருந்து எதார்த்தத்தின் உச்சங்களைத் தொடுவது, சுலோகம் போன்ற பாடல்களில் இருந்து கதாபத்திரங்களின் உள்முரண்களை வெளிப்படுத்துவது என்று ஸ்டீரியோடைப்களில் துளிக்கூட சிக்காத நடையை எழுத்தில் கொண்டு வருபவர் எல்·ப்ரீத்.

    ஆஸ்திரிய அன்னைக்கும் செக் நாட்டை சேர்ந்த யூத அப்பாவிற்கும் பிறந்தவர் எல்·ப்ரீத். அக்டோபர் 20, 1946-இல் எல்·ப்ரீத் ஆஸ்திரியாவின் முர்ஸ¤ச்லாக் (Murzzuschlag)-இல் பிறந்தார். வியன்னா பல்கலைக்கழகத்தில் இசையமைப்பு குறித்த மேற்படிப்புப் படிக்கும்போதே, அரங்க நாடகம் மற்றும் கலையின் சரித்திரம் குறித்து பயின்றார்.

    எல்·ப்ரீதின் தந்தை வேதியியல் நிபுணராக வேலை பார்த்தார். இரண்டாம் உலகப்போரின் போது ஆஸ்திரியாவின் ஆயுதத் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்து வந்தார். இதனால் அவர் தப்பித்துவிட்டாலும், எல்·ப்ரீதின் குடும்பத்தை சேர்ந்த பலரும் நாஜி கொடுமைக்கு பலியானார்கள். அம்மாவின் பிடியில் வாடும்போதே கத்தோலிக்கப் பள்ளிக்கூடத்தின் கட்டுப்பாடுகளும் சேர்ந்து கொண்டது. மிகச் சிறிய வயதிலேயே பியானோ, கிடார், வயலின் என்று பல்வேறு இசைக்கருவிகளை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

    1967-இல் தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்பை வெளிக்கொணர்ந்தார். ஆஸ்திரியாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் 1974-இல் இணைந்தவர், 1991-ஆம் ஆண்டு வரை இடது சாரி உறுப்பினராகத் தொடர்ந்தார்.

    காதலர்களாக பெண்கள் (Women as Lovers) என்னும் நாவலின் மூலம் பரவலான கவனிப்பை அடைந்தார். தொடர்ந்து நாஜி அடக்குமுறையை ஒத்துக் கொள்ளாமல் புறங்கையால் ஒதுக்கி, மூடி மறைத்துக் கொள்ளும் ஆஸ்திரிய வலது சாரிகளின் போக்கை தனது எழுத்துக்களின் மூலம் வெளிக்கொணர்ந்து வந்தார்.

    கொஞ்சம் அரசியல், கொஞ்சம் சுய விடுதலை, கொஞ்சம் பிரச்சார தொனி, என்று கலந்து கா·ப்காத்தனமான நகைச்சுவையுடன் கொடுத்து வந்தது, ஆஸ்திரிய நாட்டுப் பற்றை கண்மூடித்தனமாக பின்பற்றியவர்களுக்கு கோபத்தை வரவழைத்தது.

    வெளிப்படையான விமர்சனங்களினாலேயே தன்னுடைய தந்தையின் நாடான ஜெர்மனியில் பல பரிசுகளை வென்று வந்தாலும் தாய்நாடான ஆஸ்திரியாவுக்கு விமர்சனங்களை மட்டும் கொடுத்து வருவதாக எண்ணப்படுகிறார். ஆஸ்திரிய தேசியவாதத்திற்கு எதிரி என்று தொடர்ந்து முத்திரைக் குத்தப்பட்டு வருகிறார்.

    2004 நேர்காணலொன்றில் அவரே சொன்னது போல் 'கருத்தியல் ரீதியாக சமூகத்தின் அவலங்களை பன்முனைப் பார்வையில் அலசுவது மட்டுமே, எனக்குப் போதும். நிஜ வாழ்வின் கோரங்களை உங்களுக்கு நான் தருவேன். பாவ மன்னிப்பு தந்து மீட்சிப்பது மற்றவர்களின் வேலை'.



    முக்கியமான ஆக்கங்கள்:
    1. பெண்களாகக் காதலர்கள் (Die Liebhaberinnen): கோடை வாசஸ்தலத்திற்கு இரு பெண்கள் பயணிப்பதுதான் கதை. 1975-இல் வெளிவந்தது.

    2. இறந்தவர்களின் குழந்தைகள் (Die Kinder der Toten): 1975-இல் வெளிவந்தது.

    3. அதிசய அற்புத தருணங்கள் (Die Ausgesperrten): 1980-இல் வெளிவந்தது.

    4. பியானோ டீச்சர் (Die Klavierspielerin): அம்மாவின் கட்டுப்பாடிற்குள் அடங்கிக் கிடக்கும் இசை ஆசிரியையின் கதை. ஓடுக்கங்களில் இருந்து பாலியல் ரீதியில் விடுதலை காண முயல்கிறாள். பாலியல் வன்முறை அளவுக்கதிமாக விரவிக் கிடப்பதாக விமரிசனத்துக்கு உள்ளானது. எல்·ப்ரீதின் சுயசரிதையாகக் கருதப்படுகிறது. 1983-இல் வெளிவந்தது.

    5. காமம் (Lust): 1989-இல் வெளிவந்தது. ஆளுமையும் அதிகாரமும் ஆதிக்கம் செலுத்துவதுமே உறவுகளை தீர்மானிக்கிறது என்கிறார். பெண்களின் மேல் ஏவப்படும் பாலியல் வன்முறையை நமது சமுதாயத்தின் அடிப்படைக் கூறாக காண்கிறார்.


    முக்கியமான பிற பரிசுகள்:
    ஜார்ஜ் புக்னர் பரிசு (Georg Buchner) - 1998
    முல்ஹெம் (Mullheim) நாடகப் பரிசு - இருமுறை : 2002 மற்றும் 2004)
    ·ப்ரான்ஸ் கா·ப்கா (Franz Kafka) பரிசு - 2004



    தமிழோவியத்துக்கு நன்றி.

    | |

    புதன், ஏப்ரல் 19, 2006

    Context insensitive Cartoons

    கேலிச் சித்திரம் அல்ல...


    வெளியான இதழ்: டி.என்.ஏ


    வலைஞருக்கு பதிவெழுதியபின் உண்டாவது...


    நன்றி: Off the Mark


    சினிமா விமர்சனம் எழுத வாங்க...


    நன்றி: Six Chix


    தேர்தலுக்குப் பின் தமிழக வாக்காளப் பெருமக்கள்


    நன்றி: Close to Home



    | |

    செவ்வாய், ஏப்ரல் 18, 2006

    TN Media Watch - Dinakaran & Dinamalar

    தினகரனும் தினமலரும் முதல் பக்கத்தில் இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இரண்டிலுமே வலப்பக்கத்தில் தினசரியின் கடைசிப்பகுதியில் சம அளவில் வெளிவந்துள்ளது. தினகரனில் இந்த விளம்பரத்தைப் பெரிதுசெய்து பார்க்க இயலாது. தினமலரில் மட்டுமே முடியும்.

    தினமலரில் இந்த பக்கத்தைப் பெரிதாக்க, பயனர் பெயரை பதிவு செய்தல் அவசியம். தினமணி தங்களின் நாளிதழ் விளம்பரங்களை இணையத்தில் வெளியிடுவதில்லை. தினத்தந்தியும் வெளியிடப் பெறவில்லை. இதில் ஏன் இத்தனை வேறுபாடுகள் என்பது ஆய்வுக்குரியது.

    எனினும், தமிழ் செய்தித்தாள்களில் வெளியான அட்சய திரிதியை குறித்த விளம்பரத்தில் குறித்த தகவலில் எது சரியானது என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தால், பாம்பு பஞ்சாங்கத்தில் இது குறித்து என்ன தகவல் இடம் பெற்றிருக்கிறது என்று தேடினோம்.

    ஆனால், ஆற்காடு பஞ்சாங்கத்தில் காலை 6:03 மணிக்கு ஆரம்பிக்கிறது என்றும் பாம்பு பஞ்சாங்கத்தில் இரவு 10:58க்கு திருதியை முடிந்து விடுகிறது என்பதையும் எங்கள் ஆய்வின் முடிவில் கண்டறிந்தோம்.

    இரு தினசரிகளிலும் ஸ்னேஹாவே மாடல் புரிந்திருந்தார். தலையில் மல்லிகையும் இடுப்பில் ஒட்டியாணமும் நெற்றிச்சுட்டியும் வளையல்களும் சங்கிலிகளும் காணப்பட்டது.

    ஒரு தரப்பு விளம்பரத்தை பெரிதாக்குவது, அல்லது சில போஸ்டர்கள் மட்டும் சுட்டி 70 எம்எம் ஆக்க வாய்ப்பளித்து நடு நிலை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது என்று தமிழ் நாளிதழ்களே விளம்பரத்தை எப்படி கொடுப்பது என்று தடுமாற்றத்தில் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

    தினமலர் இவ்விஷயத்தில் முன்னணி வகிக்கிறது. தினமலரின் பல வழிமுறைகளைப் பின் பற்றத் தொடங்கியிருக்கும் தினகரன், இவ்விஷயத்திலும் தினமலரின் வழிமுறையைப் பின் பற்றத் தொடங்கலாம்.

    ஊடகக் கண்காணிப்புக் குழுவின் சார்பில்
    பாஸ்டன் பாலாஜி
    நோ அஃபென்ஸ் டு http://tnmediawatch.blogspot.com/ :-)




    தினகரனில் வெளியான மினி சரவணா:



    தினமலரின் மெகா சரவணா




    | |

    Top 10 MPs - Tamil Nadu

    செய்திகளில் அடிபட்டோ, அல்லது இமேஜை பரிபாலித்தோ, மந்திரியாக செயல்பட்டோ. கருத்து உருவாக்கியோ, என்னைக் கவர்ந்த தலை பத்து எம்பிக்கள்:

    1. என் எஸ் வி சித்தன் - 7000த்துக்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பும் அளவு அசராமல் மக்கள் பிரதிநிதியாக செயல்படுபவர்

    2. ப சிதம்பரம் - ஹார்வர்ட், வர்த்தகம், நிதித்துறை மந்திரி, தமிழ் மாநில காங்கிரஸ், சிந்தனைகளை தமிழில் வடிக்கத் தெரிந்தவர்.

    3. ஏ கே மூர்த்தி - இருவுள் வாயில் அமைச்சராக பரவலாக அறிந்த முகம். தமிழ், சித்த வைத்தியம், விமானப் போக்குவரத்து என்று பன்முகப் பார்வையில் செயல்படுபவர்.

    4. ஏ வி பெல்லார்மின் - முதல் முறை லோக் சபா உறுப்பினராக இருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்களுக்கே உரிய அர்ப்பணிப்புடன் நாகர்கோவில்/கன்னியாகுமரியோடு நிற்காமல் சவூதி அரேபியாவில் தமிழர்களின் நிலை குறித்தும் மீனவர்களுக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்புபவர்.

    5. மோகன் பொன்னுசாமி - ஒடுக்கப்பட்டோருக்காக தொடர்ந்து கவனஈர்ப்புகள் கொண்டு வருபவர்.

    6. டாக்டர் சி கிருஷ்ணன் - பொள்ளாச்சி (தனி) தொகுதிப் பிரச்சினைகள், முல்லைப் பெரியாறு

    7. ஈ வி கே எஸ் இளங்கோவன் - ஈவேரா, சம்பத் என்று குடும்பப் பாரம்பரியத்தில் காணாமல் போகாமல் தனித்துவமான வெளிப்பாடுகள் மூலம் தமிழக காங்கிரஸுக்குக் கூட எழுச்சி ஊட்டுபவர்.

    8. டி ஆர் பாலு - மிசா கைது, சூழலியல், போக்குவரத்து துறை அமைச்சர்

    9. மணி ஷங்கர் அய்யர் - லாஹூரில் பிறந்து, ஐ.எஃப்.எஸ். சேவை முடித்து, ராஜீவுடன் ஒட்டி உறவாடி, மந்திரியாகவும் மிளிர்பவர்.

    10. தயாநிதி மாறன் - லேட்டாக வந்தாலும்...



    | |

    NRI Perspectives - India Visit

    சில என்.ஆர்.ஐத்தனமான படங்கள் எடுக்காமல் இந்தியா பயணம் நிறைவுறாது.


    1.

    கலைப்பொருள்களால் வீட்டை அலங்கரிக்க நினைத்தாலும், இந்தியாவில் பெரும்பணம் செல்வழிக்க வேண்டாம். எம்.எஃப். ஹூஸேன்தான் வேண்டும் என்று அடம்பிடிக்காவிட்டால் புத்தர், விநாயகர், இராஜஸ்தான் காட்சிகள் எல்லாமே சல்லிசு.


    2.

    வெண்டிங் மெஷின்களில் உணவு வரும்; பபுள் கம் கிடைக்கும். இந்தியாவில் புதுமையாக யோசிப்பவர்கள் நிறைய பேர் என்பதற்கு எடுத்துக்காட்டாக 'தி வீக்' மற்றும் 'இந்தியா டுடே' குழுமப் பத்திரிகைகள் கிடைக்கிறது. டெல்லி விமான நிலையத்தில் பைசாவை திணித்தால், படிக்க புத்தகம் ரெடி.

    ('தி வீக்'கில் இந்த வார தலைப்புக் கட்டுரை : Left turns right - A new Left is emerging. One that loves American capital and believes in beating the imperialists at their own game)


    3.

    டெல்லியில் இருந்து பிலானிக்கு செல்லும் காத்திருப்புகளில், இருவுள் வாயில் (ட்ரெயின்) நிலையங்களில் படுத்தே பழக்கப்பட்டவன். என்றாலும், விமான நிலையங்களில் கட்டையை சாய்த்து சயனிப்பது 'டூ மச்'. ட்ரைடெண்ட் பக்கத்தில்தானே இருக்கிறது... ஒரு எட்டு போய் ரூம் போட்டு தூங்கலாமே!


    4.

    வளர்ந்த நாடுகளில் பள்ளிக்கு அழைத்து செல்லும் வண்டிகளுக்கு பயபக்தியோடு வழிவிட்டு பாதுகாப்பாக செல்லும் வரை ஒதுங்கி நிற்பார்கள். வளர்ந்த நகரங்களில் ஆட்டோ ரிக்சா போன்ற ஊர்திகள் பயன்படும். வாரநாசியில் ஏழைப்பள்ளிக்கூடத்திற்கு அழைத்துப் போகும் மிதிவண்டி.


    5.

    "பகைவர்களும் வெறுப்பு உமிழ்பவர்களும், தங்கள் எதிரிகளுக்கு எத்தகைய கொடுமை நிகழ்த்தினாலும், தீவழியில் செல்லும் புத்தி தனக்குத் தானே நிகழ்த்தி கொள்ளும் கொடுமை, அதனினும் சாலப் பெரியது." - இலங்கை புத்தராலயத்திற்கு வெளியே கிடைக்கும் புத்திமொழி.


    6.

    பாசி பிடித்த தீர்த்தம்; பிச்சைக்காரன்; லாங் ஷாட்; இந்தியா ஒளிர்கிறதா என்று எதிர்க்கட்சி அரசியலும் India Charming என்று அயல்நாட்டுக்கார ஒளியோவியன் கண்காட்சி நிகழ்த்தவும் வாய்ப்பளிக்கும் காட்சி.


    7.

    'கல்யாண மாலை' போன்ற நிகழ்ச்சிக்கு விளம்பரம் போல் பட்டாலும் நிலைமாறும் உலகில் நிலைக்கும் செல்பேசிக்கான 'Lifetime Prepaid' அழைப்பு.


    8.

  • காங்கிரஸ் ஆதரவு முலாயம் ஆட்சியில் மிருகவதையை எதிர்த்து மனேகா காந்தி உண்ணாவிரதப் போராட்டம் (அல்லது)
  • குண்டு சட்டியில் குதிரை (அல்லது)
  • மதுரை குதிரை வண்டியும் காசி குதிரைக் கொடுமையும்
    (பொருத்தமான தலைப்பைத் தேர்ந்தெடுங்க)




    | |

  • திங்கள், ஏப்ரல் 17, 2006

    Kaalachuvadu Technology Special

    1. தமிழ் லீனக்ஸ் - வெங்கட்ரமணன் பேட்டி

    2. யூனிகோட்/ஒருங்குறி - மாலன்

    3. இணைய இதழ்கள் குறித்து பத்ரி

    4. பயனர் அனுபவங்கள் - அ முத்துலிங்கம்

    5. தமிழ் கணினியின் வளர்ச்சிப் பாதை



    | |

    Dalit's State in Tamil Nadu's (un)Reserved Constituencies

    இன்றைய பிபிசி தமிழோசையில் இருந்து:

    பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் :: தலித் பிரிவைச் சார்ந்த மக்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இப் பிரிவை சேர்ந்த மக்களுக்காக தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளில் தலித் பிரிவுகளைச் சார்ந்த வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட முடியும்.

    பொதுத் தொகுதிகளில் தலித்துகள் நிற்பதற்கு தடை ஏதும் கிடையாது என்றாலும் பெரும்பாலான சமயங்களில் அரசியல் கட்சிகள் தத்தம் கட்சிகளில் உள்ள தலித் மக்களுக்கு பொதுத் தொகுதிகளில் நிற்க வாய்ப்புக் கொடுப்பதில்லை. இந் நிலையில் பொதுத் தொகுதியில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள இரண்டு தலித் வேட்பாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த பெட்டகமத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

    தயாரித்து வழங்கியவர்: டி என் கோபாலன்.


    பிபிசியை இன்றே கேட்கத் தவறியவர்களுக்காக, ஒலிக்கோப்பு: மெகா அப்லோட்



    எம்பி3 பதிவை இறக்கிக் கொள்ள விரும்புபவர்களுக்கு சில குறிப்புகள்:
    1. மெகா அப்லோட் தட்டியவுடன் 'Please Wait for 45 Seconds' என்று படுத்துவார்கள்.

    2. காலமெல்லாம் காத்திருந்தபின் 'AdBrite'இன் விளம்பரம் பிரதானமாகத் தெரியும். (MegaUpload Links என்று சோத்தாங்கை பக்கம் கேர்ள்ஃப்ரெண்ட், முடிகொட்டல், மங்காத்தா விளம்பரங்கள் தெரியும்.)

    3. விளம்பரங்களில் தடுமாறி சுட்டாமல், ஆரஞ்சு மிட்டாய் கலர் 'X' அழுத்தி அந்த சாளரத்தை மட்டும் மூடவும்.

    4. திரை விலகியதும் 'Click here to download' என்னும் பொத்தான் கிடைக்கும்... அப்பாடா... இறக்க ஆரம்பித்த பின் குளம்பி அருந்த செல்லலாம் (Filesize: 12.2 MB).


    பிகு: டோட்டல் ரெக்கார்டர், மெகாஅப்லோட் போன்ற படுத்தல்கள் இல்லாத ஒலிப்பதிவு செய்யும் நிரலி, கோப்புகளை ஏற்றும் வலையகம் சொல்வோருக்கு முன்கூட்டிய வணக்கங்கள்.




    | |

    ஞாயிறு, ஏப்ரல் 16, 2006

    Thanga Vettai

    சுடுசோறு - இதன் இலக்கணக் குறிப்பு என்ன?

    . பெயரெச்சம்
    . வினைத்தொகை
    . வினையெச்சம்
    . வினைச்சொல்

    தங்கவேட்டையில் நேற்று பாடலாசிரியர்களும், பின்னணிப் பாடகர்களும் கலந்துகொண்ட ரம்யா நிகழ்ச்சி. முதன்முதலில் தமிழ் அகராதி வெளியிட்டவர், ஒப்பிலக்கணம் கொடுத்தவர் போன்ற எம்.ஏ.த்தனமான கேள்விகளுக்கு நான் எளிதாக விடையளித்து, என்னுடைய இலக்கிய புலத்தை மனைவிக்கு ஃபிலிம் காட்டிக் கொண்டிருக்கையில், என்னை சறுக்கிவிட மேற்காணும் கேள்வி உதவியது.

    உங்களுக்காவது சரியான பதில் தெரியுமா?

    நிகழ்ச்சியில் இருதயா இந்தக் கேள்விக்கு நொடி கூட யோசிக்காமல் சரியான விடையை சொன்னார். திருமுருகாற்றுப்படையை எழுதியவர் திருவிளையாடியது போல் அரங்கினுள், எவராவது முன்கூட்டியே சொல்லி வைத்திருப்பார்களோ என்று பொறாமைப்படவைக்கும் அளவு instantaneous வேக பதில் கொடுத்தார்.

  • போன பிறப்பில் கேபி சுந்தராம்பாளாக இருந்திருப்பாரோ என்று எண்ண வைக்கிறார் 'மன்மத ராசா' மாலதி.

  • பிஜிஎம் இல்லாமலே ஹரீஷ் ராகவேந்திராவின் குரல் திரையிசைக்கு ஒப்பாக மிளிர்கிறது.

  • 'நான் எழுதினதிலே எனக்குப் பிடிக்காத பாடல் என்று எந்தப் பாடலுமே கிடையாது' என்று அசல் கலைஞனுக்குரிய பெருமிதத்துடன் 'கொக்கோ கோலா ப்ரௌவுன் கலருடா (போடாங்கோ)' போன்ற பாடல்களை எழுத்தாணிய கலைக்குமார் பகிர்ந்தார்.

  • ஸ்ரீலேகா பார்த்தசாரதி ஏன் இன்னும் ஹீரோயின் ஆகவில்லை? குறைந்தபட்சம் 'த்ரிஷா' போன்ற அக்கா நடிகைகளுக்குத் தங்கச்சியாகவாவது வேடம் கட்டலாமே...

  • விஜய் யேசுதாஸ் ஏன் இன்னும் ஹீரோ ஆகவில்லை? (கு.ப. சிம்பு போன்ற தம்பி நடிகர்களுக்கு அண்ணன் ஆ.வே.க.?)

  • மேட்ச் ஃபிக்ஸிங் நடத்தினால், தமிழ்மணத்தில் போலி நட்சத்திர வாக்களித்தால், தப்பிக்கிற மாதிரி தப்பு செய்யவேண்டும். தங்கவேட்டையை சுவாரசியமாக்க, இந்த மாதிரி celebrity போட்டிகளில் இரு அணிகளுக்கும் சம அளவில் வென்று வருவதை இன்னும் கொஞ்சம் இலை மறை கனியாக நடத்தலாம்.

  • தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் தங்கங்கள் மட்டுமாவது நேரத்தோடு உரியவர்களை சென்றடையுமா?


    | |

  • வியாழன், ஏப்ரல் 13, 2006

    Ambedkar Brithday - Dinamani

    போற்றுதல் பொருட்டு... :: ஆதவன் தீட்சண்யா

    வழக்கம்போலவே தலித் மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் மட்டுமே சில விழாக்கள் நடைபெறும். மற்றபடி பொதுவாக சில தலைவர்கள் தாங்களாகவே நேரடியாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவிப்பர். சிலர் தம் சார்பாக யாரையாவது அனுப்பி வைப்பர். ஒருவேளை இது தேர்தல் காலமாக இருப்பதால் மாலைகளின் தடிமன் மற்றும் எண்ணிக்கைகள் கூடும் வாய்ப்புள்ளது.

    எப்படியாயினும், அம்பேத்கர் என்கிற உருவம் இன்று அரசியல் களத்தில் ஒதுக்கி வைக்கப்படுவதாயில்லை. அது பொதுமைப்படுத்தப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கட்சிகளின் பதாகைகளில் மிகுந்த பெருந்தன்மையோடும் சகஜ மனோபாவத்தோடும் அவர் படம் இடம் பெற்றுள்ளது. அதாவது தன்னை சாதிய உணர்விலிருந்து விடுபட்டவராகக் காட்டிக்கொள்ள விரும்பும் தலித் அல்லாத தலைவர்களுக்கும் அமைப்புகளுக்கும் அம்பேத்கர் என்கிற உருவம் அப்படியானதொரு அங்கீகார முத்திரையாக மாறியிருக்கிறது.

    உண்மையில் அம்பேத்கர் தனக்கான அங்கீகாரத்திற்காக வாழ்நாளில் எதுவொன்றையும் செய்தாரில்லை. தனது உழைப்பையும் அறிவையும் தனக்குக் கிடைத்த அதிகாரங்களையும் சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வையும் ஒடுக்குமுறைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் மனிதஜீவிகளுக்குள் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்குமே பயன்படுத்தினார். ஆனால் இன்று அவரைக் கொண்டாடுபவர்கள், அவர் பெயரால் இயங்கும் அமைப்புகள் பெரும்பாலானவற்றுக்கும் அவரது உருவம்தான் தேவைப்படுகிறதேயன்றி அவரது சிந்தனைகளல்ல.

    பன்முகப்பட்ட ஆளுமையும் செயல்திறமும் கொண்டு விளங்கியவர். இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாய் இருக்கின்ற சாதியத்திற்கு எதிராக அறிவாயுதம் ஏந்தி வாழ்நாள் முழுவதும் போராடியவர்.

    கல்வியும் தகுதியும் திறமையும் உள்ள யாரையும் இச்சமூகம் கொண்டாடும் என்னும் பசப்பலான வாதங்களின் பின்னே பதுங்கியிருக்கும் போலித்தனங்களையும் சாதி உளவியலையும் அவரது வாழ்க்கையே அம்பலப்படுத்துகிறது. அவரளவுக்கு படித்தவர்கள் நம் நாட்டில் இன்றளவும்கூட வேறெவரும் இல்லை. இருந்தும் அம்பேத்கரை ஒரு தேசியத் தலைவராக, பெருமைமிக்க நமது முன்னோடிகளில் ஒருவராக, மாபெரும் கல்வியாளராக, வரலாற்றாய்வாளராக, சட்ட வல்லுநராக, ஒடுக்குமுறைக்கு எதிரான போராளியாகக் கொண்டாடுவதைத் தடுப்பது எது?

    நகரமயமாக்கமும் கல்வியும் நவீனத் தொழில்நுட்பமும் சாதியத்தைப் பொருள்படுத்துவதில்லை என்றும் எனவே அம்பேத்கரின் குற்றச்சாட்டுகளும் வாதங்களும் இன்று பொருந்தாது என்றும்கூட வாதிக்கப்படுகிறது. ஒரு தலித் சத்துணவு ஊழியர் சமைத்த உணவைச் சாப்பிடுவதற்குத் தமது குழந்தைகளை அனுமதிக்காத கிராமத்தாருக்கும், வால்மீகி சாதிப் பெண்களை வீட்டு வேலைக்குச் சேர்த்துக்கொள்ள மறுக்கிற தில்லிக்காரருக்கும் வாய்த்திருப்பது ஒரே மனநிலைதான். அது தீட்டு குறித்த அச்சமும் தலித்துகள் குறித்த இழிவான பார்வையும்தான்.

    உண்மையில் நகரத்திற்கென்று ஒரு சொந்த முகம் கிடையாது. சாதியத்தால் ஊரென்றும் சேரியென்றும் பிளவுண்டு, ஏற்றத்தாழ்வு என்பதை இயல்பானதொரு மதிப்பீடாகப் பயின்று வாழும் கிராமங்களிலிருந்து தனது சொந்த சாதி சார்ந்த பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், திருவிழாக்கள், மொழி, பெருமிதங்களோடு நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வந்துவிட்டவர்களின் தொகுப்பாகத்தான் நமது நகரங்கள் உள்ளன.

    தற்காலத்தில் ஒரு பஸ்ஸில் பயணிப்பது அல்லது திரையரங்கில் படம் பார்ப்பதைப் போலவே குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக ஒரு தொழிலகத்திலோ அலுவலகத்திலோ கூடுவதற்கும் சாதி ஒரு முன்நிபந்தனையாக வைக்கப்படுவதில்லை. ஆனால் அவ்விடத்திலும் அவர் தன் சாதியைத் துறக்க வேண்டியவராயில்லை. அவ்விடத்தில் அவர் வெளிப்படுத்தும் அதிகபட்ச சமத்துவ குணம் என்னவென்றால் தனது சக ஊழியர்கள் இன்னின்ன சாதியராகத்தான் இருக்க வேண்டும் என்று கோராமல் இருப்பதுதான். அந்த அலுவல் நடக்கும் போதும் முடிந்தபின்னும் வீடு திரும்பிய நிலையிலும்கூட அவர் தனது சுயசாதி சார்ந்த எதுவொன்றையும் இழப்பதில்லை. வெளியிடத்தில் அவர் தீண்டாமையைக் கடைப்பிடிக்காதவராகத்தான் இருக்கிறாரேயொழிய சாதியைக் கைவிட்டவராக அல்ல. தவிரவும் சமூகம் என்பது குடும்பம் என்கிற சிற்றலகுகளின் தொகுப்புதானே? அந்தக் குடும்பங்கள் சாதியின் அடிப்படையில்தானே கட்டமைக்கப்படுகிறது... குடும்பத்திற்குள் - தனிமனித வாழ்வில் சாதியத்தின் இருப்பு நீடிக்கிறவரை சமூகத்திலும் சாதி நீடிக்கவே செய்யும்.

    அரசியல் விருப்புறுதி கொண்ட ஓர் ஆட்சியோ ஒரு தலைவனோ வாய்க்கும்போது வலுவான சட்டங்களின் மூலமாகக்கூட சிலவகையான ஒடுக்குமுறைகளை ஒழித்துவிட முடியும்.


    சாதிரீதியான ஒடுக்குமுறைக்கும் மீறியதாய் பாலின ஒடுக்குமுறை நிலவுகிறது. சாதியைத் தவிர இழப்பதற்கு ஏதுமற்ற தலித்துக்கும் கூட இங்கே இழப்பதற்கு அவரது ஆணாதிக்க மனோபாவம் மிச்சமிருக்கிறது. சமத்துவமின்மையின் எல்லா வடிவங்களையும் எதிர்த்துக் களம் கண்ட மகத்தான போராளியான அம்பேத்கரின் சிந்தனை வெளிச்சத்தில் சாதி கடந்த, ஆண் பெண் பேதம் கடந்த மனிதநிலைக்கு மேலெழும்புவதற்கு நாம் யோசிக்கலாம். ஒருவேளை அதுதான் அவர் பிறந்ததற்கும் வாழ்ந்ததற்குமான அர்த்தம் பொதிந்த நமது போற்றுதலாயிருக்கக்கூடும்.

    (அம்பேத்கரின் பிறந்தநாள்)




    | |

    Attention Grabbed News

    சமீபத்தில் என் சிந்தனையை உசுப்பேற்றிய அல்லது அடர்த்தியான விஷயகனம் நிரம்பிய அல்லது 'டக்கரா யோசிக்கறியே கண்ணு' என்று 'அட' போடவைத்த சில ஆங்கில செய்திக் கோர்வைகள்:


  • நியு யார்க் டைம்ஸ்: இந்தியாவில் நடைபெறும் மாவோப் போராட்டங்கள் குறித்த பதிவு.

  • நியு யார்க் டைம்ஸ்: www.zunafish.com பண்டமாற்றுக்கு குக்கூரல் இடுகிறது.

  • ஹெரால்ட் ட்ரிப்யூன்: வலைப்பதிவு மூலமாக நாலு காசு சம்பாதிக்க வழி காட்டுறாங்க.

  • கார்டியன் புத்தக அறிமுகம்: Are Women Human? எழுதிய Catharine MacKinnon உடன் பேட்டி.

  • வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: அக்னி நட்சத்திரத்துக்கும் சுற்றுச்சூழல் வெப்பமாவதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம் என்று சொன்னால் அறிவியலாளர்களுக்கு ஆப்படிக்கப்படுகிறது.

  • அராபிய செய்திகள்: சவூதியில் உள்ளாடைகளை விற்பதற்கு இனி பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்கிறார்கள்.

  • நியு யார்க் டைம்ஸ்: நான் விரும்பிப் பார்க்கும் 'வெஸ்ட் விங்' முடிவுக்கு வருகிறது.

  • சூழலியல் தூய்மை: மகிழுந்தில் இருந்தும் நச்சுப்பொருட்கள் என்னவென்று தெரியுமா?

  • ஆன்லைன் வாய்ஸ்: எழுத்தாளர் சுஜாதாவுடன் செவ்வி.

  • எம்.ஐ.டி. vs கலிஃபோர்னியா பல்கலை: திருட்டு படவா என்று சொல்லலாமா? (கல்லூரிகள் பெண்களைக் கவர்வதில்தான் சண்டை வரும்; இவர்கள் கவர்ச்சியில்லாத பீரங்கியை அல்லவா கடத்துகிறார்கள்.)



    | |

  • Pudupettai Banner Causes Traffic Woes

    முன்னுமொரு காலத்தில் லேஸி கீக் இப்படியெல்லாம் அருமையான புகைப்படங்களை தன் வலைப்பதிவில் இடுவார். சென்னையில் வசித்தாலும், எப்படி இவரால் மட்டும் பல்லவன் விரையும் சென்னை சாலைகளில் படம் எடுக்க முடிகிறது என்று ஆச்சரியப்படுவேன்.

    இப்பொழுதுதானே புரிகிறது...

    இப்படி டிராஃபிக்கில் நின்று கொண்டிருந்தால், வண்டியை நடு ரோட்டில் நிறுத்தி விட்டுக் கூட நிழற்பட ஓவியராகலாம்!

    Traffic Congestion in Madras with Pudupettai movie banner as Backdrop

    வெளியான தினசரி: தினமலர்



    | |

    Me, Myself, Balaji

    சமீபத்தில் நண்பர்களுக்கு அறிமுகமாக நான் எழுதிகொண்டது:

    நான் பாலாஜி. அமெரிக்காவில் பாஸ்டன் பக்கம் வசிப்பதாலும் இணையத்தில் நிறைய பாலாஜிகள் இருந்ததாலும் புனைப்பெயர் வைக்க கற்பனைப் பஞ்சத்தினாலும் 'பாஸ்டன்' பாலாஜி என்று அழைக்கப் படுகிறேன்.

    பள்ளிக் கூட பருவத்தில் வீடு நிறைய புத்தகங்களாக இருக்கும். அம்மா ஆர். பொன்னம்மாள் ஓர் எழுத்தாளர். ஆன்மிகம், குழந்தை இலக்கியம், சங்க இலக்கியம் போன்றவற்றில் தீவிர ஈடுபாடும் நூற்றுக்கணக்கான புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். என்னுடைய அம்மாவைக் குறித்து விரிவான அறிமுகம் தொகுக்க ஆரம்பித்து, பாதியில் தொக்கி நிற்கிறது. தற்போதும் காமகோடி, கோகுலம், ஞான ஆலயம் போன்ற பத்திரிகைகளிலும் வானதி, திருமகள் போன்ற பதிப்பாளர்களிடமிருந்து புத்தகங்களிலும் செயல்பட்டு வருகிறார்.

    அவர்கள் உந்துதலில் +2 வரை கண்டதும் படிக்க முடிந்தது. சில சமயம் அமுதசுரபி; கணையாழி; மஞ்சரி; பல சமயம் விகடன்; குமுதம்; திசைகள்; தவறவிடாமல் புஷ்பா தங்கதுரை; சுஜாதா; ப.கோ.பி.; ராஜேஷ்குமார். எப்பொழுதாவது லஷ்மி; சிவசங்கரி; கல்கி.

    கல்லூரியில் படிப்பும் ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே வாசிக்க கிடைத்த வடக்கு இந்தியா. என்றாலும் படைப்பார்வத்தில் பல கதைகளும் சில குறுநாவல்களும் எழுதினேன். அவற்றில் சில தமிழோவியம் வெளியிட்டது:
    கங்கை இல்லாத காசி | சுய சாசனம்

    ஐந்து வருடம் முன்பு இரா. முருகனால் நடத்தப்படும் ராயர் காபி கிளப் சேர்ந்த பிறகுதான் மீண்டும் தமிழில் எழுதப் பழகினேன். அதன்பின் திண்ணை, வலைப்பதிவு, மரத்தடி, தமிழோவியம் போன்ற வலையகங்களில் தொடர்ந்து (பெரும்பாலும்) கட்டுரைகள், சில சமயம் புனைகதைகள் எழுதி வருகிறேன்.



    சமீபத்தில் தினமொரு வலைப்பதிவாக அறிமுகம் செய்யும் தேன்கூடு கொடுத்த அறிமுகம்:

    பாஸ்டன் பாலாஜி [பாபா] (என்கிற) பாலாஜி சுப்ரா, ஒரே சமயத்தில் பல குதிரைகளில் பயணம் செய்பவர்! தனது வலைப்பதிவில் தினம் ஏதாவது ஒன்று புதிதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளும் நபர்களில் ஒருவர். தமிழ் இணையத்தில் எங்காவது ஏதாவது தீப்பொறி கிளம்பினால், அதைக் குறித்து மறைமுகமான நையாண்டிக் கட்டுரையோ அல்லது கணிப்போ இவரது வலைப்பதிவில் இடம் பெற்றிருக்கும்.

    இவரது வலைப்பதிவில் குமுதம் ரேஞ்ச் பதிவுகளும் இடம் பெறும்; இலக்கிய சர்சைகளும் இடம் பெறும். ஏகப்பட்ட தகவல்கள், தொடுப்புகள் என்று கொடுத்திருப்பார். இத்தனை தகவல்களை இவர் எங்கிருந்து திரட்டுகிறார் என்பதில் பலருக்கு பிரம்மிப்பு. இணையம் மற்றும் வலைப்பதிவுகள் குறித்து பாஸ்டன் பாலாஜியால் எழுதப்படும் கட்டுரைகள், கவனத்தினை ஈர்ப்பவை.

    இரண்டாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வலைப்பதிந்து வரும் பாஸ்டன் பாலாஜி, குழுமங்களிலும், தமிழோவியம், திசைகள் போன்ற பல இணைய இதழ்களிலும் பரவலாக எழுதி வருபவர். இலக்கிய ஆர்வலர். வலைப்பதிவாளர்களை உற்சாகப்படுத்தும் சகா. படித்தில் பிடித்ததை சொல்லத் தயங்காதவர். கில்லி - யில் ஒரு ஆட்டக்காரர்.தமிழோவியம் ஆசிரியர் குழுவிலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


    விளம்பரம் இத்துடன் முடிகிறது; வழக்கமான ஜல்லிகள் தொடரும்.

    | |

    செவ்வாய், ஏப்ரல் 11, 2006

    France Labor Law Rescinded amidst French Riots

    ஃப்ரான்சில் மாணவர் போராட்டம் - இந்த வாரத் தமிழோவியத்தில் வெளியானது

    'சீட்டைத் தேய்க்கும் உத்யோகம்', 'விகடன், குமுதம் படிக்கும் அரசு அலுவலகம்', 'மேஜை மேல் கவுந்தடித்துத் தூங்கலாம்'
    என்று பணி நீக்க பயமற்ற, சிரத்தையில்லாத இந்திய அரசுத்துறை ஊழியர்கள் மேல் துணுக்கு நகைச்சுவைகள் வெளிவருவது சாதாரணம். போராடுவதற்கு விஷயப் பற்றாக்குறையால் தவிக்கும் ஃப்ரென்ச் இளைஞர்களும் 'வேலைநீக்கம்' மேல் அச்சம் கொண்டு களமிறங்கி, தங்கள் பலத்தை யூனியன் தோழர்களுடன் கைகோர்த்து வெளிக்காட்டி, வாபஸ் பெற வைத்திருக்கிறார்கள்.

    பிரான்ஸ் நாட்டின் பிரதம மந்திரி டாமினிக் வில்லேபின் (Dominique de Villepin) சி.பி.ஈ. (CPE, the “Contrat Premiere Embauche”) என்னும் "முதல் வேலைக்கான ஒப்பந்த"த்தை உள்ளடக்கிய தொழில்துறை மாற்றங்களை ஜனவரி 16-ஆம் தேதி அறிவித்தார். சர்சைக்குரிய அந்த இளைஞர்-தொழில் சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளதை ஒரு பெரிய வெற்றியாக அந்நாட்டு மாணவர்களும், தொழிற்சங்கங்களும் வரவேற்றுள்ளன.

    ஃபெப்ரவரி ஏழாம் தேதி பேரணி ஆகட்டும்; ஏப்ரல் இரண்டாம் தேதி சட்டமாக்கப்பட்ட பின் நடந்த கிளர்ச்சிகள் ஆகட்டும்; பெரிய அளவிலான எதிர்ப்பைத் பறைசாற்றியது. ஏன்?

  • 26 வயதுக்கு உட்பட்டோரை மட்டுமே இந்த புதிய சட்டம் குறி வைக்கிறது.

  • வேலைக்கு சேர்ந்த இரண்டு வருடத்துக்குள், எந்தவிதக் காரணமும் காட்டாமல் இவர்களை வேலையை விட்டு தூக்கலாம்.

  • ஒரு மாதத்திற்கு மேல் வேலையில் வைத்துக் கொண்டால், இரு வார முன்னறிவிப்புத் தர வேண்டும்; ஆறு மாதங்களுக்கு மேல் வேலையில் இருந்திருந்தால், குறைந்தபட்சமாக ஒரு மாதத்திற்கு முன்பு வேலை போகப்போவதை தெரிவிக்க வேண்டும்.

  • இரண்டு வருடங்கள் வேலையில் இருந்து விட்டால் தற்போது நடைமுறையில் இருக்கும் ப்ரான்ஸ் நாட்டு ஒப்பந்தங்கள் இருபத்தாறு அகவைக்குள் இருப்போருக்கும் பொருந்தும்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் (2005) இதே மாதிரி சட்டம், சி.என்.ஈ (CNE, “Contrat Nouvelle Embauche”) நடைமுறைக்கு வந்தது. இருபது ஊழியர்களுக்குக் குறைவானவர்களே உள்ள நிறுவனங்களுக்காக அது இயற்றப்பட்டது. சிறு முதலாளிகளை, புதியவர்களை வேலைக்கு சேர்த்துக்கொள்ள, ஊக்குவிக்க, அந்த சட்டம் பயன்பட்டது. தற்போது, அதே சட்டம் இருபது பேர்களுக்கு மேல் இருக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்துமாறு நீட்டிக்கப்பட்டதே, மாணவர்களின் எழுச்சிக்கு வித்திட்டது.

    சோஷலிஸத்துக்கும் மாறாமல், கேபிடலிஸத்தையும் விடாமல், திரிசங்கு சொர்க்கமாக ஃப்ரான்ஸ் தவிக்கும் காலம் இது. ஆர்செலோர் (Arcelor)-ஐக் கைப்பற்ற நினைக்கும் லஷ்மி மிட்டலைத் தட்டிக் கழித்து, அன்னியரை உள்ளே விடாமல் பாதுகாக்க நினைக்கிறது. உலகத்துக்கே முற்போக்காக வறுமையை ஒழிப்பதில் புத்தம் புதிய சிந்தனைகளை முன்வைப்பதோடு நில்லாமல், செயல்வீரராக, ஃப்ரான்ஸ் நாட்டுக்குள் நுழையும் விமான பயணிகளுக்கு வரி விதித்து (airline ticket levy - ATL) அறுநூறு மில்லியன் யூரோக்களை ஈட்டி, கொடையாக வழங்குவதற்கு வழிவகுத்திருக்கிறது.

    தங்கள் நாட்டின் அரதப்பழசான தொழில்துறை சட்டங்களை தூசு தட்ட நினைக்கும் அரசாங்கம். உலகமயமாக்கல் என்னும் அதிவேக ஜெட்டைத் தவறவிடக்கூடாது என்னும் தொலைநோக்குப் பார்வையுடன் புதிய வரைவுகளை முன்வைக்கின்றன.

    ஃப்ரென்ச் இளைய தலைமுறைக்கும் அதே பயங்கள்தான். பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் கூடிய வாழ்க்கைமுறை, வாரத்துக்கு 35 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்கும் சொகுசு, அலுவலில் இருந்து வருடத்துக்குக் கிட்டத்தட்ட இரண்டு மாதகாலத்துக்கு உல்லாச விடுமுறை போன்றவை குறைந்து விடுமோ என்னும் பயங்கள்.

    அலுவலில் ஆள்குறைப்பு என்பது தனியார் துறைகளில் (இந்தியாவிலும், அமெரிக்காவிலும்) சாதாரணமாக நிகழ்வது. வயது வித்தியாசம், இன, மொழி பாகுபாடுகள் பாராமல் எவரும் வேலையில் ஜொலிக்காவிட்டால் அல்லது நிறுவனத்திற்கு கஷ்ட காலம் என்றால் நீக்கப்படுவார்கள். பிறிதொரு வளரும் நிறுவனம் இவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதும் பொருளாதார சுழற்சியின் கட்டாயம்.

    தீவிர இடதுசாரிகள் இந்த நிகழ்வை அமெரிக்க பொருள்முதல்வாதத்தின் பின்னடைவாகக் கருதுகிறார்கள். பாதுகாப்பான வேலையை ஏற்படுத்திக் கொடுக்காததன் மூலம் தொழிலாளிகளிடையே பயம் நிறைந்த சூழ்நிலையை முதலாளிகள் நிலவவிடுகிறார்கள். கடைநிலைத் தொழிலாளிகள் சம்பள உயர்வு, விடுமுறை கோருவதை நிறுத்தி விடுகிறார்கள். அதன் மூலம் கிடைத்த சேமிப்புகள், ஏற்கனவே பணம் பெருத்த மேலாளர்களின் ஊக்கத்தொகையாக அமைகிறது.

    கழிவிறக்கம், சுய பச்சாதபம் போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டு உளவியல் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள் தொழிலாளிகள். 'ஆட்குறைப்பு' என்பது தேவையற்ற ஒன்று என்னும் கருத்தை இவர்கள் முன்வைக்கிறார்கள். நீக்குவதற்கு பதிலாக, அவர்களையே புதிய நுட்பங்களிலும், தேவையான மேலாளர் பயிற்சிகளிலும் ஈடுபடுத்தி, நிறுவனம் அவர்களின் நம்பிக்கையைக் கோருமாறு பரிந்துரைக்கிறார்கள்.

    ஃப்ரான்சின் வீதிகளில் இறங்கிப் போராடும் மாணவமணிகளும் இதே கருத்தாக்கத்தை அதிகார எதிர்ப்பாக நினைத்துக் கொண்டு முன்வைத்திருக்கிறார்கள். ஃப்ரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை பத்து சதவீதத்துக்கு மேல் இருக்கிறது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இதே போல் வேலை கோருபவர்களின் சதவீதம் ஐந்துக்கும் குறைவாகவே உள்ளது. ஃப்ரான்சில் இளைய தலைமுறையினரில் இருபத்தி இரண்டு சதம் வேலையில்லாமல் இருக்கிறார்கள். கடந்த வருட இறுதியில் நிகழ்ந்த, கலவரம் மூண்ட பிறப்டுத்தப்பட்ட பகுதிகளில் இது 50% ஆக உள்ளது.

    இதற்கு என்ன காரணம்?

    ஃப்ரான்ஸ் அமெரிக்க ஸ்டைல் பொருள்முதல்வாதத்தை முன்னிறுத்துவதில்லை. தொழிலாளர்களுக்கு 'உறுதியான நிலையான நீடித்த வேலை' என்று நிறுவனங்களை அச்சுறுத்துவதால், புதியவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ள மேலாளர்கள் தயங்குகிறார்கள்.
    தேவையான போது தொழிலாளர்களைக் கூட்டவும், குறைக்கவும் அமெரிக்காவில் இருக்கும் சட்டங்கள் எளிதாக உள்ளன. ஆனால், ·ப்ரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில், இந்த வசதி இல்லாததால், நிறுவனங்களுக்கு கடும் மனத்தடை ஏற்படுகின்றன. பொருளாதாரம் வீழ்ந்தாலும் தொழிலாளர்களை நீக்க முடியாத நிலை. நீக்கினால், நஷ்ட ஈடாக பெரும்பணம் கொடுத்தனுப்பவேண்டிய மொகஞ்சதாரோ காலத்து சட்டதிட்டங்கள்.

    ஃப்ரான்சில் இவ்வகை பழமையான சட்டங்களை மாற்றுவதற்குத்தான் சிராக் (Jacques Chirac) முயல்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு கிடைக்காதது; தேர்தல்களில் தோற்பது என்று இறங்குமுகமாகவே இருந்தாலும் லே பென்னின் (Jean-Marie Le Pen) அதிரடி வலதுசாரிப் பிரச்சாரத்தினாலேயே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிராக். கட்டாய இராணுவப் பணியை நீக்கியதும், வேளாவேளைக்கு பாரிஸ் நகரக் குப்பைத்தொட்டிகள் நீக்கப்படுவதையும் தவிர இவர் எதையுமே சாதிக்கவில்லை என்று ஊடகங்கள் இவரைக் கிண்டல் செய்வதை அகற்றும் முயற்சியாகத்தான் 'முதல் வேலைக்கான ஒப்பந்த'த்தைத் தீட்டியிருந்தார்.

    இவ்வளவு பெரிய கிளர்ச்சியைக் கடைசியாக 1968-இல் ப்ரான்சு கண்டிருந்தது. கலகத்தைத் தூண்டும் பிரசுரங்களை அச்சிட்டதற்காக, பல்கலையில் இருந்து மாணவர்கள் நீக்கப்பட்டதை அடிநாதமாகக் கொண்டு, அன்று கலகம் மூண்டது. அடக்குமுறைக்கு எதிரான குரலாக, தொழிற்சங்கங்களும் அதில் இணைந்து கொண்டது. பொருளாதார முன்னேற்றம் கண்ட காலத்திலேயே, கிளர்ச்சி ஏற்பட்டது. சம்பள உயர்வு, குறைந்த பட்ச சம்பளவிகித அதிகரிப்பு என்று பேரங்கள் பேசப்பட்டு தொழிலாளிகளுக்கு வெற்றியும், கொள்கையளவில் நோக்கமும் கொண்ட போராட்டம் அது.

    இன்றைய சூழலும் பொருளாதார வளர்ச்சி நிகழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டம்தான். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி போன்ற சக நாடுகளை விட அந்நிய முதலீடு, அதிக அளவில் ஃப்ரான்சை சென்றடைகிறது. உடல்நலத் திட்டத்தில், உலகிலேயே சிறந்து விளங்குவதாக உலக சுகாதார மையம் (World Health Organization) ஃப்ரான்சை அறிவித்திருக்கிறது. ஆனால், போராடத்தான் எதிரிகள் இல்லாமல், எதற்கு எதிராக கலக்கொடி தூக்கலாம் என்று குழம்பிய இளைய சமுதாயம்.

    தாற்காலிகமாக வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் போக்கை மாற்ற நினைத்தார் சிராக், CNE, New Recruitment Contract, CPE, CDD என்று சிண்டைப் பிய்த்துக் கொள்ளவைக்கும் சட்டச்சுழல்கள். நிரந்தரமாக வேலைக்கு அமர்த்திக் கொள்ள நேர்காணல்கள் பயன்படும் என்றாலும், இது போன்ற புதிய திட்டங்கள் நிறுவனங்களுக்கு சூழலை லகுவாக்குகிறது.

    அரசன், ராஜா போன்றவையாகவே ஃப்ரென்சு நிறுவனங்களையும், அடிமைக்கூலியாகத் தம்மையும் தொழிலாளிகள் கருதுகிறார்கள். அமெரிக்காவில் நிறுவனங்களை வேலை கொடுப்பவர்களாகவும், தொழிலாளிகளை வேலை தருபவர்களாகவும் நினைக்கிறார்கள். சந்தைப்படுத்திய குமுகாயத்தில் சில சமயம் வேலை வேண்டுபவர்கள் அதிகமாக இருக்கலாம்; சில சமயம் வேலை கொடுப்பவர்கள் அதிகமாக இருக்கலாம்.

    இல்லாத அடிமைத்தளைக்கு எதிராக தடியெடுத்து, இருதலைக்கொள்ளி அரசனுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, தங்கள் தலையில் கொள்ளிக்கட்டை வைத்து போராட்டத்தை ஒலிக்க விடுகிறார்கள் மாணவர்கள்.

    இளைய தலைமுறைக்கு ஐம்பது வயதில், வேலையில் இருந்து ஓய்வூதியம்; குறைந்தபட்ச ஊதியமாக ஆயிரம் வராகன்கள் என்று செட்டிலாக நினைப்பு. உலகம் மாறுவதை தாம்ஸ் ஃப்ரீட்மான் 'The World Is Flat'ஐ ஃப்ரென்ச் மொழிக்கு மொழிபெயர்க்க சொன்னாரா என்று தெரியவில்லை.


    உதவிய, தொடர்புள்ள செய்தி ஊடகங்கள், புத்தகம்:

    1. போராடுபவர்களின் வலைப்பதிவு

    2. தி கார்டியன் நாளிதழ்

    3. பிபிசி

    4. ·ப்ரென்சு அமைச்சகம்

    5. The Disposable American : Layoffs and Their Consequences

    6. C-SPAN




    | |

  • சனி, ஏப்ரல் 08, 2006

    Chandramukhi - One Year & Counting

  • ஒரு வருடம் முன்பு திரைப்படத்தை ரசித்தவுடன் ரஜினியின் மேல் வெறுப்புடையவர்கள் எழுதக்கூடியதாகப் பதிந்தது

  • மந்திரமுகி கதை

  • சந்திரமுகி ஏப்ரல் 14 வெளியீடு

  • சந்திரமுகி விமர்சனங்கள்

  • ரஜினியால் சந்திரமுகியில் ரி-மிக்ஸ் செய்ய முடியாத பாடல்கள்: மிஸ்ட் ரி-மிக்ஸ்


    Chandramuki - 365 Days

    விளம்பரம் வந்த செய்தித்தாள்: தமிழ் முரசு

  • வெள்ளி, ஏப்ரல் 07, 2006

    Pagirvu Meet Details

    நவீன கலை இலக்கிய பரிமாற்றம் - பகிர்வு

    நீங்கள் அனுபவித்து உணர்கின்ற எதுவுமே வேறு யாரோ ஒருவரால் ஏற்கனவே அனுபவித்து உணரப்பட்டு விட்டது. 'ஆகா, நான் ஒரு பேரின்ப நிலையிலே இருக்கிறேன்' என்று நீங்கள் சொல்லிக் கொள்வதன் பொருள், உங்களுக்கு முன்னதாக வேறு ஒருவர் அதை அனுபவித்து அதை உங்களுக்குக் கொடுத்திருக்கிறாரென்பதுதான். நீங்கள் அதை எந்த ஊடகத்தின் வழியாக அனுபவித்தபோதிலும், அது இரண்டாவது முறையாக, மூன்றாவது முறையாக மற்றும் இறுதியாக ஏற்படும் ஒரு அனுபவம் மட்டுமே. அது உங்களுடையது அல்ல. உங்கள் சொந்த அனுபவம் என்று எதுவுமே கிடையாது. அத்தகைய அனுபவங்கள், எத்துணை அசாதாரணமைவையாக இருப்பினும், அவை ஒரு மதிப்பும் அற்றவை.
    -யு.ஜி. கிருஷ்ணமூர்த்தி


    இலக்கிய சந்திப்புகள் என்றால் இணையத்தில் அறிமுகமான நண்பர்களை சந்திப்பதுதான் என்னுடைய பழக்கம். பாஸ்டன் பக்கம் வருகை தருபவர்களை வீட்டீல் வைத்து உரையாடுவது; ட்ரைவ்-இன் வுட்லண்ட்ஸில் காபி சாப்பிட்டுக் கொண்டே நண்பர்களுடன் பேசுவது என்ற மட்டில் சென்னை விஸிட்கள் முடிவடைந்து விடும்.

    யாஹூ தூதுவனில் திலகபாமாவுடன் தட்டச்சும்போது அரட்டைவாக்கில் 'வாரயிறுதியில் சென்னை வருகிறேன்; தங்களையும் நண்பரகளையும் சந்திக்க இயலுமா?' என்று கேள்வி எழுப்பியவுடன் பன்முக சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, அழைப்பிதழ் கொடுத்து, வலையெங்கும் அறிவித்து நிறைய பிரமிப்பையும் கொஞ்சம் நாணத்தையும் ஏற்படுத்திவிட்டார்.

    Kavinjar Vijayan chatting with Kalvettu Pesugirathu Sornabharathy
    கடைசியாக எழும்பூர் பக்கம் உலாவியது 'தளபதி'க்காக. தீபாவளிக்கு வந்திருந்த திரைப்படத்தை முன்பதிவு செய்ய ஆல்பட் திரையரங்கு பக்கம் சென்றிருந்தது மலரும் வைபவம். 'ராக்கம்மா கையைத் தட்டிய' பரவசங்கள் நிறைந்த நினைவுகளுடன் மூன்று மணியளவில் அபிராமி ஹோட்டலை நானும் என்னுடைய அண்ணன் ஹரிஹரனும் சென்றடைந்தோம். கூட ஒருவரை துணைக்கு வைத்துக் கொள்ளுவது நல்லதாகப் பட்டது. இலக்கிய சந்திப்பில் இணையத்தரமாய் ஏதாவது விவகாரம் கிளப்பி கைகலப்பானால் தர்ம அடியில் இருந்து காப்பாற்ற சகோதரனை பக்கபலமாக வைத்துக் கொண்டு வரவேற்பரையில் காத்திருக்க ஆரம்பித்தோம்.

    Pagirvu Ilakkiya Santhippu with Sivakasi Bharathy Ilakkiya Sangam & Vaikarai Ilakkiya Vaasalஎங்களுக்கு முன்பே இதழியலில் பணிபுரியும் சோமசுந்தரம் ஆஜர். அவருடைய கவிதையார்வத்தை தெரிந்து கொண்டிருக்கும்போதே, 'அபிராமி' உணவகம் மற்றும் குடிலகத்தின் உரிமையாளர் எஸ். விஜயன் எங்களுடன் இணைகிறார். தன்னுடைய 'மௌனம் பேசும்' துளிப்பா தொகுப்பைக் கையெழுத்திட்டு தந்தார்.

    புரட்ட ஆரம்பித்ததில் எனைக் கவர்ந்த இரண்டு ஹைக்கூ:

    1. ஓடிய நதிகள்
    தவழ்ந்து செல்கின்றன
    கோடைக்காலம்

    2. அணிந்த ஆடையை
    மாற்றுவதேயில்லை
    வண்ணத்துப்பூச்சி

    நல்ல முறையில் அச்சிடப்பட்டு, குறிப்பிடத்தக்க துளிப்பாக்களைக் கொண்ட தொகுப்பு.

    With Mariya Therasaஅடுத்து வந்தவர் மரிய தெரஸா. பனிரெண்டு புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டவர். நிர்மலா சுரேஷின் படைப்புகளில் எம்.·பில். ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். தமிழகத்துச் சூழ்நிலையில் குடும்பத் தலைவியாகவும் இருந்து கொண்டு, ஹிந்தி ஆசிரியையாகவும் பணியாற்றிக் கொண்டு, படைப்பிலக்கியத்திலும் தீவிரமாக செயல்பட்டு வருவதை அறிய முடிகிறது. கவிதை, குறும்பா, திறனாய்வு, விமர்சனம், மொழிபெயர்ப்பு என்று பல துறைகளில் பங்காற்றுகிறார்.

    நவீன நாடக நடிகர் விஜயேந்திரனுடன் சிறிது உரையாட வாய்ப்பு கிடைக்கிறது. ந. முத்துசாமி வழியில் எவ்வாறு சிவகாமி பெத்தச்சி அரங்கம் நிரம்பும் அளவு With Vijayendran & Amirtham Sooryaசென்னையில் நவீன நாடகங்கள் வேர் கொண்டிருக்கிறது என்பதை உள்ளார்ந்த ஆர்வத்துடன் விவரிக்கிறார்.

    மூன்றரை மணிக்குத் 'சூழ்வெளிக் கவிஞர்' வைகைச் செல்வி, திலகபாமா, வில் விஜயன், தமிழ்மணவாளன், 'அமிர்தம்' சூர்யா என அனைவரும் வந்து சேர 'கல்வெட்டு பேசுகிறது' சொர்ணபாரதி வரவேற்கிறார்.

    தமிழ் மணவாளனுக்கு சிரமமான பொறுப்பு. என்னை அறிமுகப்படுத்தும் வேலை. என்னுடைய திண்ணை, தமிழோவியம், வலைப்பதிவு எழுத்துக்களைப் படித்துவிட்டு அதன்மூலமாக தான் Thamizh Manavalan Welcomesபெற்ற உருவகத்தைக் கொண்டு பேசினார். நியுயார்க் வேலைநிறுத்தம் தொடர்பான கட்டுரை, அமெரிக்கத் தேர்தல் என்று அவர் விரிவாக அலசலை முன்வைக்கிறார். பிட் நோட்டிஸ் போன்ற அறிமுகம்தானே கிடைக்கும் என்று நான் எண்ணியதை உடைத்து, வருகையாளர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தியும் விட்டுவிட்டார்.

    எனக்குத் தரப்பட்ட, நானே விரும்பி எடுத்துக்கொண்ட தலைப்பு 'எனது வாசிப்பனுபவம்'. வந்திருந்த சிற்றிதழ் படைப்பாளிகளையும், நவீன நாடக கர்த்தாக்காளையும், இலக்கிய அமைப்பு ஆர்வலர்களையும் கருத்தில் கொண்டு என்னுடைய இராஜேஷ்குமார் பாக்கெட் நாவல் தலைப்பு Kalvettu Pesugirathu Sitrithazh Editor Sornabharathy Introducesஅனுபவங்களையும், ராஜேந்திரகுமார் பனியன் வாசக ரசனைகளையும் சொற்பொழியாமல் தவிர்த்துவிடுகிறேன்.

    போதிய அளவு ரெ·ப்ரன்ஸ் எடுக்காதது முதல் காரணம். 'சுந்தர ராமசாமி நடிகர் விஜய்யை முன்னிறுத்துவதை ஜெயமோகன் வெளிக்கொணருவதும் - இளங்கோவடிகள் மாதவியை முன்னிறுத்துவதை கலைஞர் ரசிப்பதும்' போன்ற இலக்கியத்தரமான சிந்தனைகள் பாயாத 'ஜெட்-லாக்' கலையாத மயக்கத்தில் இருந்தது இரண்டாவது காரணம்.

    என்னுடைய புத்தக வாசிப்பு குறித்த பதிவுகளை சுருக்கிக் கொண்டு இணையம் குறித்து பேச விரும்புவதையும் கேள்வி பதிலாக உரையாடுவதை விரும்புவதையும் சொன்னேன். வலையின் With partial list of Participantsமூலம் 'கல்வெட்டு பேசுகிறது', 'அமிர்தம்' போன்ற சிற்றிதழ்கள் பரவலான கவனிப்பைப் பெறக்கூடிய சாத்தியக்கூறுகள்; துளிப்பா, கவிதைகளுக்குக் கிடைக்கும் உடனடி விமர்சனங்கள்; ஒத்த சிந்தனையுள்ளவர்களை எளிதாக சென்றடையக் கூடிய வாய்ப்புகள்; உங்களுக்கு அறிமுகமான வழக்கமான விஷயங்கள்தான்.

    தலைப்பை ரசமாக வைப்பதன் முக்கியத்துவத்தை சொல்லத் தவரவில்லை. 'வைகோவைக் குறித்து த்ரிஷா என்ன சொன்னார்?' என்று தலைப்பாக வைத்துக் கொள்ளுங்கள். உள்ளே, நீங்கள் எழுதிய கவிதை, கட்டுரை எல்லாம் கொடுங்கள். கடைசியாக 'பின் குறிப்பாக: ஒன்றுமே சொல்லவில்லை' என்று முடித்துக் கொள்ளுமாறு எனக்குத் தெரிந்த டிப்ஸ் கொடுக்கிறேன்.

    புத்தகம் அச்சடிக்க ஆகும் செலவு, அன்றாட நிகழ்வுகளுக்கு உடனடி எதிர்வினை கருத்தாக்கம், The Talkersசக படைப்பாளிகளுடன் எளிதாக ஊடாடுதல் ஆகியவற்றை மீண்டும் வலியுறுத்தி முடித்துக் கொண்டேன்.

    நான் வலைப்பதிவதை போலவே அலைபாயும் பேச்சு. சென்ற முறை பிரபஞ்சனின் அமெரிக்க வருகைக்குப் பின்பு 'பகிர்வு' தன் சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறது. மார்ச் 25 அன்று அடுத்த சந்திப்பு. பிரபஞ்சனின் பேச்சு சர்ச்சைக்குள்ளானது போலவே என்னுடைய பேச்சிலும் ஏதாவது விவகாரம் கிளப்பலாம் என்று ஒன்றிரண்டு axiom-களை முன்வைக்கிறேன்:

  • தமிழக மக்களிடையே திண்ணை.காமும், இலங்கைத் தமிழரிடையே பதிவுகள்,காமும் பெரும்பாலான வலைஞர்களால் பார்க்கப்படுகிறது. ஆனால், எண்ணிக்கையில் அதிகமான Amirtham Soorya Talksகவிதைகளும் கதைகளும் பதியப்படுவதால், அங்கு உங்களின் படைப்புகள் கவனிப்பில்லாமல் காணாமல் போகலாம்.

  • நான் ஆசிரியர் குழுவில் பங்கு வகிக்கும் தமிழோவியம்.காம் தளத்தில் சீரான தேர்வில் கதைகளும் கவிதைகளும் இடம்பெறுவதால், அதிகமான வாசகர்களால் படிக்கப்பெறும் வாய்ப்பு நிறையவே உண்டு.

    தேன்கூடு, தமிழ்மணம் போன்ற முக்கிய தளங்களின் முகவரிகளையும் (எழுத்துரு மற்றும் வலைப்பதிவு அமைக்க) என் மின்னஞ்சலையும் பகிர்ந்து கொண்டேன்.

    தொடர்ந்து திலகபாமாவின் மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம் பேச்சு. கவின் கவி Thilagabama Speechபோன்றோரின் ஆழமான மாற்றுக் கருத்துக்களுடன் விவாதம் தொடர்ந்தது. சூரியாளின் கட்டுரை முழுதும் அவரின் வலைப்பதிவில் படிக்க கிடைக்கிறது.

    'மரவண்டு' கணேஷ் கரெக்டாக டிபன் வருவதற்கு சில மணித்துளிகள் இருக்கும்போது நுழைகிறார். ஜிலேபி, இட்லி, வடை, விதவிதமான சட்னி என்று உள்ளே தள்ளினோம்.

    வைகறை இலக்கிய வாசல் நிகழ்வை 'வில்' விஜயன் தன்னுடைய மிமிக்ரி மூலம் தொகுத்து வழங்கியது ஹைலைட். 'பாஸ்டன் பாலாஜி சென்னையை விட்டு பல்லாண்டுகள் ஆனாலும், இன்னும் சென்னைத் தமிழை மறக்காமல் இருக்கிறாரே' என்று ஜனகராஜாக Vil Vijayan Speechமாறுகிறார். பெண்ணியத்தின் ரியாலிடியை கிருபானந்த வாரியாரைத் துணைக்கழைத்து சுட்டுகிறார். சிரித்து சிரித்து திலகபாமாவுக்கு விக்கலே எடுத்து விடுகிறது. இறுக்கமாகத் தொடர்ந்த களத்தை சுருக்கமாக நாலே வார்த்தையில் பல குரல் மன்னராக சொல்லி முடிக்கிறார். முழு நிகழ்ச்சியையும் கூர்ந்து கவனித்ததும், அவற்றில் கண்ட நுணுக்கமான அவதானிப்புகளை நகைச்சுவையாக பகிடி செய்ததும் அனைவராலும் வரவேற்கப்படுகிறது.

    'பகிர்வு' என்னும் கூட்டத்தின் நோக்கத்திற்கேற்ப விழாவுக்கு வந்திருந்த படைப்பாளிகளையும், குறுகிய காலத்தில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த 'கல்வெட்டு பேசுகிறது' ஆசிரியர் சொர்ணபாரதியையும், எனக்கும் ஒரு விசிட்டிங் கார்ட் கொடுத்த தமிழ் மணவாளனையும் ஆர்வத்துடன் அனைவரையும் வரவழைத்த திலகபாமாவுக்கும் 'அமிர்தம்' ஆசிரியர் சூர்யா நன்று நவில்கிறார்.

    http://www.flickr.com/photos/86707200@N00/tags/pagirvu/ஜெயமோகனின் முன்னுரையுடன் கூடிய சிறுகதைத் தொகுப்பு, எம்.யுவனின் அணிந்துரை கொண்ட கவிதைத் தொகுப்பு, வெங்கட் சாமிநாதனின் மதிப்புரை தாங்கிய கலை விமர்சன கட்டுரைத் தொகுப்பு என்று தீவிர இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தாலும் படு எளிமையாகக் காணப்படும் அமிர்தம் சூர்யாவுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. 'அதற்குத் தக' கவிதைத் தொகுப்பை தமிழ் மணவாளன் கையெழுத்துடன் பெற்றுக் கொள்கிறேன். 'கங்கா கௌரி' இதழ்கள் கிடைக்கிறது. சொர்ணபாரதியின் கவிதைகள் தாங்கிய 'மனவெளியளவு' கேட்டுப் பெற்றுக் கொண்டேன்.

    அமெரிக்காவில் நண்பர்களுடன் பேசும்போது 'டாக்ஸ் ·பைல் பண்ணியாச்சா?' (இன்னும் இல்லை), 'நல்ல ப்ளம்பர் யாரு?' (வியட்நாமில் இருந்து வந்தவர்கள்) போன்ற உரையாடல்களே பகிரப்படும். சிவகாசி 'பாரதி இலக்கிய சங்க'மும் வைகறை இலக்கிய வாசலும் என் நெஞ்சாங்கூட்டில் என்றும் விலகாத தரமான சிந்தனையைக் கிளறும் பகிர்வை ஏற்படுத்திக் கொடுத்தது.


    மற்ற மற்றும் பெரிய உரு புகைப்படங்கள்




    | |

  • Imiayam Tamil TV Channel

    இளமையில் வறுமை என்பது கொடுமை. அதனினும், உடையில் வறுமையைப் பார்க்க முடியாதது இன்னும் கொடுமை.

    முதல் கொடுமை தீர்க்க திமுக-வுக்கு வாக்களிக்க வேண்டும். இரண்டாம் கொடுமை தீர சன் டிவி தொடுப்பு கொடுக்க வேண்டும்.

    வறுமையை பொழுதுபோக்காக ஆக்க;
    பொழுதுபோக்காக வறுமையைக் கழிக்க...


    DMK Free Offer on Colour TVs in Election Maifesto - Nakeeran via Dinakaran

    சொல்லாம ஃப்ரீயாக் கொடுக்கறது ஜெஜெ பாலிசி!
    சொன்னதை ஃப்ரீயாக் கொடுக்கறது திமுக பாலிசி?

    நன்றி: தினகரன்


    புதிதாக 'இமையம் தொலைக்காட்சி' ஆரம்பிக்கிறார்களா? யாரு பின்னாடி இருக்கிறார்கள்... இணையத்தளம், அறிவிப்பு எங்கே கிடைக்கிறது... (பதிலுக்கு முன்கூட்டிய நன்றிகள்.)
    Imiayam Tamil TV Channel



    | |

    வியாழன், ஏப்ரல் 06, 2006

    (Un)Scientific Results

    தேசாந்திரி - ஒரு கூகுள் தேடல் : யாத்ரீகனைத் தொடர்ந்து...


    வலைப்பதிவுகளிலும் இணையத்தமிழிலும் எந்த பெயர் அதிகம் அடிபடுகிறது? எந்தக் கட்சி பெயர் பெரிதும் எழுதப்படுகிறது? கவனத்தைக் கோருகிற அரசியல்வாதிகளைத் தேடினால் கிடைக்கும் வலைப்பதிவு எது? (கூகிளின் தேடல் முடிவுகள் அன்றாடம் மாறிக் கொண்டேயிருக்கும் என்றாலும்...) கூகிளின் தேடல் பட்டியல் முடிவுகளில் கண்ணில் படுகின்ற முதல் வலைப்பதிவு எது?

    கருணாநிதி - 14,500 : ரவி ஸ்ரீனிவாஸ்

    திமுக - 9,700 : இட்லி வடை

    காங்கிரஸ் - 18,100 : மணிக்கூண்டு சிவா

    ஜெயலலிதா - 11,200 : Lumbergh-in-training

    அதிமுக - 945 : இட்லி வடை

    அஇஅதிமுக - 127 : பத்ரி

    வைகோ - 10,300 : இட்லி வடை

    மதிமுக - 428 : குழலி

    ராமதாஸ் - 613 : குழலி

    இராமதாஸ் - 111 : முத்து (தமிழினி)

    பாமக - 297 : தேர்தல் 2006

    பாட்டாளி மக்கள் கட்சி - 281 : தமிழ் முஸ்லீம்

    திருமாவளவன் - 506 : கனடாக் கவிஞர் திருமாவளவன்

    தொல் திருமாவளவன் - 123 : கரிகாலன்

    திருமா - 450 : அழகப்பன்

    விடுதலை சிறுத்தைகள் - 179 : ரவி ஸ்ரீனிவாஸ்

    ரஜினிகாந்த் - 554 : சிவாஜித் திரைப்படம்

    விஜய்காந்த் - 133 : முத்து

    தேமுதிக - 14 : இட்லி வடை





    | |

    Staying Ignorant

    வாங்க... கட்சி ஆரம்பிக்கலாம்; மாறலாம்!

    Non Sequitur by Wiley Miller


    Non Sequitur by Wiley Miller




    |

    புதன், ஏப்ரல் 05, 2006

    Tamil Nadu Elections 2006

    கூட்டாஞ்சோறு தேர்தல்; கூட்டாட்சி 2006


    அமெரிக்காவின் ஆதிகால ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் தன்னுடைய பதவிக்காலம் முடியும்போது அரசியல் கட்சிகளைக் குறித்து அமெரிக்க மக்களுக்குக் கடுமையான தொனியில் எச்சரிக்கிறார்:

    "காலப்போக்கில் இவை (அரசியல் கட்சிகள்) சக்திவாய்ந்த பொறிகளாக மாறிவிடும் சாத்தியம் இருக்கிறது. கொள்கையற்றவர்களும், சாமர்த்தியசாலிகளும், பேராசைமிக்கவர்களும் மக்கள் சக்தியை வீணாக்கி, அரசாங்கத்தைத் தங்களின் கைவசப்படுத்திவிடலாம்."

    மாநிலத்துக்கு நன்மை தரும் திட்டங்களை மத்திய ஆட்சி தந்தால், அதிமுக அரசு தட்டிக் கழிக்கிறது. மாநில அரசின் கோரிக்கைகளை மோதல் போக்குடன் மத்திய அமைச்சகம் நிராகரிக்கிறது. ஒத்துப்போக வேண்டாம். சுமுகமாக காரியத்தை சாதிக்கும் போக்கு இல்லாததால் பல திட்டங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது.

  • புதிய தலைமைச் செயலகத் திட்டம்,
  • சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம்,
  • சேது சமுத்திர திட்டம்,
  • பைக்காரா நீர் மின் திட்டம்,
  • தூத்துக்குடி துறைமுக விரிவாக்கத் திட்டம்,
  • கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்

    அடுக்கிக் கொண்டே போகுமளவு நேருக்கு நேர் அக்னி நட்சத்திரமாக பங்காளிக் கழகங்கள் மோதிக் கொள்கிறது.

    இருந்தாலும் தமிழகத்தைக் குறிப்பிடத்தக்க மாநிலமாக கடந்த நான்காண்டுகளும் தக்கவைத்திருக்கிறார் ஜெ. ஜெயலலிதா. அதிரடி முடிவுகள்; கவர்ச்சிகரமானத் திட்டங்கள்; நிதிநிலை நிர்வாகம் என்று கட்டுக்கோப்புடன் தமிழகத்தை முதன்மை மாநிலமாகத் தொடர வைத்திருப்பதில் அதிமுக-வுக்கு பெரும்பங்கு இருக்கிறது. அதே போல் குறைந்த காலத்தில் திறமைசாலியாக முன்னிறுத்திக் கொண்ட தயாநிதி மாறனுக்கும் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கும் இன்ன பிற தமிழக அமைச்சர்களின் பங்கும் சம அளவில் கணக்கிடப்பட வேண்டும்.

    உள்கட்டமைப்பு, தொழில்துறை, சேவைத்துறை, உற்பத்தித்துறை என்று ஒவ்வொன்றிலும் தமிழகத்தை தலைநிமிரச் செய்திருக்கிறார் ஜெயலலிதா. மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை சாதனைகளை மட்டுமே தயாநிதி மாறன் தன்னுடையதாக சொல்லலாம். நோக்கியா, பி.எம்.டபிள்யூ, செயிண்ட் கோபைன், ·போர்ட், ஹூண்டாய், உலகவங்கி, இண்டெல், ஸ்டாண்டர்ட் சார்டர்ட், ஏ.பி.என் ஆம்ரோ வங்கி என்று டஜன் கணக்கில் பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வத்துடன் தமிழகத்தில் முதலீடு செய்ததில் முந்தைய திமுக ஆட்சியுடன் சரியான போட்டி போட்டிருக்கிறார் ஜெயலலிதா.

    2001 தேர்தலை நேர்மறையாக அணுக நினைத்து திமுக தோற்றுப்போனது.

    இந்தியா டுடே மாநிலங்களின் தரப்பட்டியல் கணிப்புகளின் படி இந்தியாவிலேயே நான்காவது இடத்தில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. (தமிழகத்துக்கு முன்பாக பஞ்சாப், கேரளா மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் உள்ளது.)

  • சட்டம் ஒழுங்கில் #2
  • ஆரம்ப சுகாதாரத்தில் #3
  • ஆரம்ப கல்வியில் #4
  • உள்கட்டமைப்பில் #9 (தென்னிந்திய மாநிலங்களில் #2; கேரளா மட்டுமே முன்னே உள்ளது.)
  • விவசாயத்தில் #3

    இதற்கெல்லாம் முதலமைச்சர் மட்டுமேதான் காரணம் என்பது போல் அதிமுகவினரும் புரட்சித் தாய், கழகத்தின் காவல் தெய்வம், வாழும் வள்ளலே, தங்கத் தாரகை, வெற்றிச் செல்வி, சிங்கநிகர் தலைவி, இதய தெய்வம், வீரத்தாய், ஒளிவிளக்கு, காவிரி தந்த கலைச்செல்வி, நிரந்தர முதல்வர் என்று புகழாரம் சூட்டி மகிழ்கின்றனர்.

    இவற்றில் சில உயர்வு நவிற்சிக்காகவே சொல்லப்படுவதால் கேளிக்கையாக ரசித்துவிட்டுப் போய்விடலாம். நிரந்தர முதல்வர் என்பது முதல் சறுக்கல். தேசிய அளவில் கூட்டணி ஆட்சி நடப்பது போல் தமிழகத்திலும் கூட்டணி ஆட்சிக்கான தேர்தலாக 2006-ஐ எடுத்துக் கொள்ளலாம். திமுக கூட்டணி ஜெயித்தால் கவலையில்லை. மத்தியில் காங்கிரஸின் உயிர் திமுகவின் எம்பிக்கள் வாக்கில் இருக்கும். சென்னை கோட்டையில் திமுகவின் நாற்காலி காங்கிரஸின் கோஷ்டி கானங்களில் அபஸ்வரமாக ஒலித்தாலும் டெல்லி மேலிட மேடம் குரல் கொடுத்தால் அடங்கிப் போகும்.

    பெரியாரின் பேரனும் காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மத்திய இணை அமைச்சராக 'அடுத்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி வேண்டும்' என்று கோரினார். மேலும் பல விமர்சனங்களை திமுக தலைவர் கருணாநிதி மேல் வைத்தார். சோனியா காந்தியும் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கும் தொலைபேசியில் மன்னிப்பு கேட்ட பிறகே இளங்கோவனார் சொன்ன கெட்ட வார்த்தையான 'கூட்டணி ஆட்சி' வாபஸ் வாங்கிய பிறகே திமுக அமைச்சரவையில் தொடர்ந்தது.

    ஆனால், இன்றைய சூழலில் திமுகவே ஆட்சிக்கட்டிலைப் பகிர தயாராகவே உள்ளது. கூட துணைக்கு காங்கிரஸ் போன்ற கட்சி இருந்தால் சௌகரியம் என்று கருணாநிதி நினைக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி போன்ற பச்சோந்தி கட்சியை ஆட்சியில் சேர்த்துக் கொள்வதால் ஸ்திரத்தன்மை கிடைக்காது. மேலும் அதிமுக போதிய இடங்களை வென்று தனிப் பெரும்பான்மை அடையாவிட்டால், தேர்தல் முடிவுகளுக்குப் பின் இராமதாஸ் அணி மாறி விடுவார்.

    மத்தியில் தன்னுடைய கட்சி காங்கிரஸையும் மாநிலத்தில் அதிமுகவையும் ஆதரிக்கும் என்று அறிக்கை விட்டு மத்தியில் மகன், மாநிலத்தில் மகள் என்று அமர்க்களமாக பாலிடிக்ஸ் நடத்தும் கட்சி - பாட்டாளி மக்கள் கட்சி. பா.ம.க.வை நம்பி ஆட்சி அமைக்க முடியாது. காங்கிரஸ் உட்கட்சிப் பூசலை சமாளிப்பதற்கே நேரம் சரியாக இருப்பதால், ஆட்சியைக் குலைக்கப் பெரிதாக திட்டம் தீட்ட மாட்டார்கள். மேலும் துணை முதல்வர் கோரினால் கூட, ஸ்டாலினை முதல்வராக்க சரியான சந்தர்ப்பம் கிடைக்கும். சோனியாவைப் போல் கூட்டணித் தலைவராக கருணாநிதியும் முதலமைச்சராக ஸ்டாலினும் இருப்பார்கள்.

    கருணாநிதிக்கும் திமுகவுக்கும் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கிறது?

    கடந்த மே மாதம் நடந்த காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் கருணாநிதி இரு கூட்டங்களில் மட்டுமே பங்கேற்றார். தேர்தல் ஆணையர் கண்டிப்போடு செயல்பட்டாலும், ஆளுங்கட்சியும் அமைச்சர்களும் பம்பரமாக சுழன்று செயல்பட்டு வெற்றியடைந்தார்கள். இப்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் அதிமுக கூட்டணியில் பம்பரமாக செயல்படும். ஆனால், 234 தொகுதிகளிலும் ஆளுங்கட்சியாக வலம் வராமல், சாதாரண கட்சியாக வாக்கு கோருகிறது அதிமுக.

    பெரியார் 'ஐந்து நோய், மூன்று பேய்' என்று கூறுவார். அந்த ஐந்து நோய்களில் ஒன்று 'அரசியல்'.

    'ஆட்சியைப் பிடித்தே தீருவோம்' என்று சென்ற வருட இறுதியில் தாமிரபரணி ஆறு மீது சத்தியம் செய்தார் வைகோ. இன்று, அதிமுகவின் 184 தொகுதிகளைக் கொடுத்துவிட்டு, தன்னைவிட விஜய்காந்தின் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்திற்கு இட ஒதுக்கீடு அதிகம் கிடைத்துவிடுமோ என்று கவலைப்படும் நிலை. ஊடகங்களின் மிகப்பெரிய காமெடியனாக வைகோ திகழ்கிறார். கொள்கைப்பிடிப்புள்ளவர், நம்பிக்கை நட்சத்திரம் போன்ற ஒளிவட்டங்கள் தொலைந்து, சாதாரண வாக்காளனின் நம்பிக்கையை இழந்திருக்கிறார். பெரியார் சொன்ன அரசியல் நோய் பெருமளவு பீடிக்கப்பட்டவர்கள் வைகோவும் மதிமுகவும்.

    விஜய்காந்த் செல்லும் இடமெல்லாம் பெருங்கூட்டம் கூடுகிறது. மாற்றத்தை விரும்பும் மக்கள் மத்தியில் அவருக்கு பெரும் செல்வாக்கு இருக்கிறது. சினிமா கவர்ச்சிக்கு மவுசு உண்டு. அதையும் தாண்டி திறமையாக 'நடிகர் சங்க'த்தை அரசியல்காரர்களுக்கு நடுவில் அட்ஜஸ்ட் செய்து நிர்வகித்தவர் என்னும் கள சர்டிஃபிகேட் இருக்கிறது. வைகோ விட்ட இடத்தை விஜய்காந்த் பிடித்திருக்கிறார். அதிமுக-வுடன் கூட்டணி என்றாலும், தனித்து நின்றாலும் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை தேதிமுக அடைவது உறுதி. அதிமுக-வுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தால் மதிமுக-வின் வாக்கு வங்கியை பாதிக்காமல், மதிமுகவை விட அதிக இடங்களில் வெற்றி பெறுவார்கள்.

    தனித்து நின்றால் வாக்காளரின் சொந்த செல்வாக்கு மட்டுமே செல்லுபடியாகும். மதுரைப் பக்கம் இரண்டு மூன்று தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்து, இரண்டில் நின்று இரண்டிலுமே கேப்டன் ஜெயிப்பார். 1991-இல் சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் பண்ருட்டி இராமச்சந்திரன் மட்டும் வெற்றி பெற்றார். (அந்தத் தேர்தலில் திமுக-வின் சார்பில் மு. கருணாநிதி மட்டுமே வெற்றி பெற்றார்.) அது போல் தேதிமுக தனித்துப் போட்டியிட்டால் இரண்டு மூன்று இடங்களை மட்டுமே பெறமுடியும். மதிமுகவின் வெற்றியை முடிந்த அளவு பாதித்து வைகோவை சோகத்தில் ஆழ்த்துவது மட்டுமே தேதிமுகவின் முக்கிய சாதனையாக ஆகலாம்.

    தேதிமுக சார்பில் சிவகாசி ஜெயலட்சுமி, செரீனா, சந்தனக் கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி போன்ற பெயர்பெற்றவர்கள் நிறுத்தப்படலாம். ஊடகங்களுக்கும் வலைஞர்களுக்கும் தீனியாக விமர்சனங்களும் செய்திகளும் கிடைக்குமே ஒழிய அவர்கள் வெற்றி பெறும் வாய்ப்பு எதுவும் இல்லை.

    மகளிருக்கு இட ஒதுக்கீடாக 33 சதவீதத்தை விஜய்காந்த் அறிவித்துள்ளார். பெண் வேட்பாளர்களை நிறுத்துவதில் வேறு எந்தக் கட்சியும் இவ்வளவு அக்கறை காட்டவில்லை. மூவாலூர் ராமாமிர்தம், சிவகாமி சிதம்பரனார், மணியம்மையார் என்று பலர் தனித்துவத்தோடு போட்டியிட்டது அந்தக் காலம். காங்கிரஸின் ஜெயந்தி நடராஜன், அதிமுகவின் வளர்மதி போன்ற ஒரு சிலர் தவிர திமுக, அதிமுக, போன்ற முக்கிய கட்சிகளும் காங்கிரஸ், பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற வளரும் கட்சிகளிலும் தலைமைப் பண்புகளோடு தன்னெழுச்சி பெற்ற பெண்களின் முகங்களை தேர்தல் களத்தில் காண முடியவில்லை.

    காவிரி தந்த கலைச்செல்வி என்று சுவரொட்டிகள் காணப்பட்டாலும் தண்ணீர்ப் பஞ்சம் இல்லாததால் ஜெயலலிதா தப்பித்துவிட்டார். நான்கு வருடங்களில் நடுவர் மன்ற ஆணைப்படி 820 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும். வந்தது என்னவோ 484 டி.எம்.சி.தான். மத்திய அரசுடன் பிணக்கு போடுவது போல் அண்டை மாநிலத்துடனும் மோதல் போக்கை கடைபிடித்தார் ஜெயலலிதா.

    அரசு வகுத்திருக்கும் நிலத்தடிநீர் நிர்வாகக் கொள்கை ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்திக்கிறது.

  • மழைநீர் சேகரிப்புத் திட்டம்,
  • விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு 43 கோடி அளவில் டேனிடா திட்டம்
  • உலக வங்கி உதவியுடன் 840.84 கோடி அளவில் நீர் ஆதாரங்கள் ஒருங்கிணைப்பு திட்டம்
    என்று நீர்வளத்தை திறம்பட மேம்படுத்தியிருக்கிறது அதிமுக அரசு.

    நிர்வாகத்திறனை பாராட்டி மகிழும் அதே வேளையில் அதிமுக அரசின் அகங்கார முதலமைச்சரின் போக்கையும் லஞ்ச ஊழல்களையும் சொன்னால் இணையத்தின் கொள்ளளவே நிரம்பும் அளவு தகவல்களும் வழக்குகளும் நிரம்பியுள்ளன.

    முதலமைச்சரால் எழுந்து நின்று வணங்கப் பட வேண்டிய சபாநாயகர் முதல்வரைப் பார்த்ததும் 'எழுந்து நிற்கவோ, காலில் விழவோ' என்று பணிவாக நெடுஞ்சாண்கிடையாக வீழ்கிறார். அடுத்த ஆட்சியில் தொங்கு சட்டமன்றம் அமைந்தால், கூட்டணி கட்சிகளைத் திருப்திசெய்யும் நோக்கில் சபாநாயகர் வேறொரு கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப் படும் வாய்ப்பு இருப்பது மட்டுமே நிம்மதி.

    ராபின் மெயின் வங்கி ஊழல் வழக்கு இருபது வருடங்களுக்கு மேலாக தீர்ப்பாகாமல் சபாநாயகர் காளிமுத்துவுடன் கண்ணாமூச்சி ஆடி வருகிறது.

    ஜெயலலிதா, சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அண்ணியச் செலாவணி மோசடி வழக்கில் ஆஜராகி dial-up வேகத்தில் கேஸை நகர்த்துகிறார்கள். சொத்து குவிப்பு வழக்கு கொஞ்சம் டி.எஸ்.எல் வேகத்தில் நகர்ந்தாலும் லண்டன் ஹோட்டல் வழக்கில் எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை. அப்படியே இவை எல்லாம் முடிந்தாலும், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று ஜெயலலிதா 'நிரந்தர முதல்வரா'க அரியாசனம் தாங்க பல வழிகள் இருக்கும்.

    ஜெயலலிதா 2003-இல் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பேரில் ரத்து செய்தார். லோக்சபா தோல்விகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு அது வாபஸ் ஆனது. இது போன்ற வெகுஜன கவர்ச்சித் திட்டங்களினால் அரசுக்கும் பொருளாதாரத்துக்கும் பின்னடைவே.

    'சாதி, மதம் முதலிய அடிப்படைகளில் அரசியல் நடத்துவதை விட சினிமாப் புகழை வைத்து அரசியல் நடத்துவது எவ்வளவோ மேல்'
    என்னும் ஞாநியின் சிந்தனையுடன் நான் முற்றும் ஒத்துப் போகிறேன்.

    தேவர்களின் வாக்கை குறி வைக்கும் கார்த்திக்; ஜாதிப் படி வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள்; இவற்றில் சரியான மாற்றாக எவருமே இல்லாதது வருத்தத்துக்குரியது. இரண்டு கோடி முக்குலத்தோர் இருப்பதாக சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். சமீபத்திய ஆண்டு கணக்கெடுப்பின்படி கிட்டத்தட்ட ஒரு கோடி முக்குலத்தோர் இருக்கிறார்கள். வன்னியர் வாக்கு வங்கியைப் போல் தனிக்கட்சியின் கீழ் தேவர்கள் இல்லை. ஃபார்வார்ட் ப்ளாக், மூவேந்தர் முன்னேற்ற கழகம் ந. சேதுராமன் என்று பலவாகப் பிருந்திருக்கின்றனர்.

    தலித் வாக்குகள் பள்ளர், பறையர், அருந்ததியர் என்று உட்பிரிவுகளால் பிளவுபட்டிருக்கிறது. 'புதிய தமிழகம்' கிருஷ்ணசாமியை எந்தக் கட்சியுமே உரிய மரியாதையுடன் நடத்தவில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட தேவர் சமூக வாக்குவங்கியும் மறவர், அகமுடையர், பிறமலைக் கள்ளர் என்று பிளவுபட்டிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் எம்.ஜி.ஆர்; எம்.ஜி.ஆருக்குப் பிறகு சசிகலா செல்வாக்கு உடைய அதிமுக என்று பரிவு காட்டி வருகின்றனர்.

    கடைசியாக சில கணக்குகள்...

  • 4.72 கோடி தமிழக வாக்காளர்கள் இருக்கிறார்கள்
  • இதில் கடந்த 2004 தேர்தலில் அதிமுக-வுக்கு ஒரு கோடி வாக்குகள் விழுந்தது.
  • இப்பொழுது அதிமுக-வுடன் திருமா, வைகோ போன்றோர் அணிமாறி அல்லது தனித்து நிற்பதற்கு பதில் கூட்டு வைத்திருக்கின்றனர்.

  • 12.5 லட்சம் அரசு ஊழியர்கள் வாக்கு வங்கி சென்ற லோக் சபா தேர்தல் போல் இல்லாமல் இப்போது திருப்தியாக இருக்கிறது.
  • 86 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் பலவித சலுகைகளினாலும் தக்க வானிலையாலும் மீண்டும் வேலைக்கு செல்கிறார்கள்.
  • 51 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மின்சாரத் தள்ளுபடி போன்றவை அள்ளிவிடப்பட்டுள்ளது.
  • 2.11 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன
  • இதில் 35 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்து பயனடைய ஆரம்பித்திருக்கிறார்கள்.
  • தலித் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தில் 1.26 லட்சம் பேர்கள் பயனடைகிறார்கள்.
  • வெள்ள நிவாரண நிதியாக அனைவருக்கும் 2000 ரூபாயைக் கொடுத்திருக்கிறது.

    தமிழன் 'ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்' உடையவன். கடைசியாகக் கிடைத்த 2000 ரூபாயும், கடை கண்ணிக்கு செல்ல உதவும் சைக்கிளும், இலவச மின்சாரமும்தான் மனதில் லயிக்கும்.

    நெரிசலில் சிக்கி இறந்த 48 பேர், கொள்கை அரசியலை மூட்டை கட்டிய மதிமுக, போன்றவை புறந்தள்ளப்படும். இவை எல்லாம் மீண்டும் அதிமுக ஆட்சியையே சுட்டுகிறது.

    இந்த கட்டுரை எழுதும்போது விஜய்காந்த் கூட்டணியில் சேரவில்லை. சேர்ந்தால் ஜெயலலிதாவின் வெற்றி உறுதி செய்யப்படும். சேராவிட்டால், சில தொகுதிகளில் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்கு இரண்டாக உடையும்போது, திமுக-வுக்கு பாதகம் விளைவிக்கும். 1989-இல் பெருவாரியான ஓட்டுகள் இரண்டாக ஜானகி அணிக்கும், ஜெயலலிதா அணிக்கும் கிடைத்தாலும், ஆட்சி அமைத்தது என்னவோ திமுக-தான்.

    2001-இல் சிறப்பான கூட்டணி வியூகம் வகுத்தும் திமுக - ஆளுங்கட்சிக்கு எதிரான அலையில் தோற்றுப்போனது. இன்றைய நிலையில் தமிழக மக்கள் அதேபோல் ஒரு ஷாக் ட்ரீட்மெண்டை அதிமுக-வுக்குக் கொடுத்து, திமுக-வின் கூட்டணி ஆட்சியை கோட்டைக்கு அனுப்ப வேண்டும் என்பதே என் விருப்பம்.

    80 சீட்களை அதிமுகவும், 100 தொகுதிகளை திமுகவும், மீதமிருக்கும் 54 தொகுதிகளை மற்ற கட்சிகளும் பெற்றால் 'மைனாரிட்டி' அரசு கிடைக்கும். அரசாள்பவர்களும் கொஞ்சம் பயபக்தியுடன் செயலாற்றுவார்கள்.

    திசைகளுக்கு நன்றி

  • புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு