Soban babu's Desecration Confession
கண்ணகியைக் கட்டிப்பிடித்தேன் - முன்னாள் நடிகர் சோபன் பாபு
குறிப்பு: இது முழுக்க முழுக்க கற்பனை என்றாலும், நிஜத்தில் நிகழ்ந்தால் நான் பொறுப்பல்ல!

'சோபன் பாபு கூறுவது அப்பட்டமான பொய்' என்றும் 'கண்ணகி சிலை அருகே கண்ணன்கள் யாரும் சென்ற ஆட்சி பதவியேற்கும் வரை அனுமதிக்கப்பட்டதில்லை' என்றும் முதல்வர் கருணாநிதி மறுத்துள்ளார்.
இதற்கு பதிலளித்து சோபன் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"லட்சக்கணக்கான ரசிகைளின் மனதைப் புளகாங்கிதப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. கண்ணகி சிலை அருகே என்ன நடந்தது என்பது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெரியும். இது ஒரு தனிப்பட்ட சம்பவம். இதை நான் வெளிப்படுத்தவும் விரும்பவில்லை.
2001 ஆம் ஆண்டு ஜகபதி பாபுவுக்காக ஒரு புதிய படம் தயாரித்தேன். அதற்கு கரடி ஜோஸியம் பார்த்தேன். அப்போதுதான் கண்ணகி என் மீது கோபமாக இருப்பது தெரியவந்தது. நான் மன்னிப்பு கேட்டு செல்வி ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம் இப்போது வெளியாகிவிட்டது" என்று சோபன் பாபு கூறியுள்ளார்.
கண்ணகியின் நினைவாக தான் பாடல் இயற்றியதாக சொன்ன அவர் விஜய் யேசுதாஸை வைத்து இசையமைத்துள்ளதாகத் தொடர்ந்தார்:
கண்ணகிசனம் சோபன் பாபனம்
கரடீஸ்வரம் சிலம்பாதுகம்
பாண்டியமர்த்தனம் நித்யநிர்மூலனம்
கண்ணகியாத்மஜம் காதலாஷ்ரயே
மெரீனாவுக்கு நள்ளிரவில் சென்று கற்புக்கரசி கண்ணகியைத் தொட்டு கட்டிப் பிடித்ததாகக் கூறிய தெலுங்கு நடிகர் சோபன் பாபுவை தண்டிக்க வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
ஆயினும் இப்பிரச்சனை தன் தந்தைக்கு தொடர்பானது என்பதால் அரசு தலையிடாது என்று கூறியுள்ள அமைச்சர் முக ஸ்டாலின், கண்ணகியைக் கைப்பற்றி தன் காதலியை மறைக்கும் அளவு முக்கியத்துவம் வாய்ந்த நடிகை யார் என்பது குறித்து விசாரணை நடத்தி அந்த நடிகையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் சமஸ்கிருதத்தில் கண்ணகிப் பாடல் என்பது பொருத்தமற்றது என்றும், தமிழில் பாடிய டூயட் தமக்குக் கிடைத்திருப்பதாக சொன்ன அமைச்சர், பாடலை ஒலிக்கவிட்டார்:
காற்சிலம்பு கண்ணகிக்கு
தள்ளுமுள்ளும் உடம்புக்கு மெத்தை
கண்ணகியே சோபனுக்கோ
சோபனுக்கே கண்ணகியா
லாரி இடிப்பு கண்ணகிக்கே
மீள் நிறுவல் கண்ணகிக்கே
"'கண்ணகியுடன் ஆண்' என்று சர்ச்சையை ஏற்படுத்தி, மலிவான விளம்பரம் தேட முயல்கிறேன் என்னும் குற்றச்சாட்டை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறுத்துள்ளார். அதிமுக தலைவர் எம்.ஜி.ஆர். கூட தன் ஆட்சிக் காலத்தில் கண்ணகிக்கு மரியாதை செய்ததை 'மாலையிட்ட மணாளன்' என்று ஏசியவர்கள் இன்று கோட்டை விட்டதை அங்கீகரிக்கத் தயாராக இல்லை. உண்மை எதுவாக இருந்தாலும் நான் அதை வெளியில் சொல்வேன்" என்றார் ஜெயலலிதா.
நிஜ நிகழ்வுகள்: Webulagam : Jaimala should be prosecuted - Kerala Minister! | Dinamani.com - Headlines Page | Webulagam : Lord Ayyappan knows the truth - Jaimala!
desecration | Kannagi | Sabari+Malai